தமிழ்நாடு
இவர்கள் எல்லாம் மொழிப்போர் ஈகியர்களுக்கு நினைவஞ்சலி செலுத்துவதா? தங்கர்பச்சான் கேள்வி!

மொழிப்போர் தியாகிகள் தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது என்பதும், தமிழக முதல்வர் முக ஸ்டாலின், அதிமுக பிரமுகர்கள் உள்பட பல அரசியல்வாதிகள் மொழிப்போர் தியாகிகளின் திருவுருவப் படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர் என்பதை பார்த்தோம்
இந்த நிலையில் இவர்கள் எல்லாம் மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்துவது சரிதானா என்ற கேள்வியை பிரபல இயக்குனர் தங்கர்பச்சான் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ஆம் தேதி மொழிப்போர் தியாகிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது என்பதும், அன்றைய தினத்தில் மொழி போருக்காக உயிரை மாய்த்துக்கொண்ட தியாகிகளுக்கு மரியாதை செய்வது வழக்கமான ஒன்றாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டப வளாகத்தில் மொழிப்போர் தியாகிகள் மணிமண்டபத்தில் நேற்று முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் மரியாதை செய்தார். அவரை அடுத்து அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் எதிர்க்கட்சியினரும் மரியாதை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் டுவிட் செய்துள்ள பிரபல இயக்குனர் தங்கர்பச்சான் அவர்கள் கூறியிருப்பதாவது: 55 ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் திராவிட கட்சிகள் தமிழ்வழிக்கல்வியை கட்டாயமாக்காமல், தமிழ்மொழியை ஆட்சி மொழியாக்காமல், பிறமொழி கலப்பின்றி 60 நொடிகள் கூட பேச முடியாத நிலையில் தமிழர்களை ஆக்கி விட்டன. இவர்களெல்லாம் மொழிப்போர் ஈகியர்களுக்கு நினைவஞ்சலி செலுத்துவது சரிதானா!


















