இந்தியா
சிபிஎஸ்இ பிளஸ் 2 ரிசல்ட் தேதி அறிவிப்பு!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சிபிஎஸ்சி பிளஸ் 2 உள்பட கிட்டதட்ட அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன என்பதும் மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ் செய்யப்பட்டனர் என்பது தெரிந்ததே.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பிரதமர் மோடி அவர்கள் சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும் மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ் செய்யப்படுவதாகவும் மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கிடும் பணிக்காக குழு ஒன்று அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த குழு கடந்த சில நாட்களாக மதிப்பெண் பட்டியலை அமைக்கும் பணியில் தீவிரமாக இருந்தது. பத்தாம் வகுப்பு மதிப்பெண், பதினோராம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு செய்முறை தேர்வு மதிப்பெண் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு சிபிஎஸ்சி பிளஸ் 2 மதிப்பெண் கணக்கிடும் பணி நடைபெற்று வருவதாகவும் விரைவில் சிபிஎஸ்இ பிளஸ் 2 மதிப்பெண்கள் வெளியிடபடும் என்றும் கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி சிபிஎஸ்சி பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியாகிறது என சிபிஎஸ்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. www.cbse.nic.in என்ற இணையதளம் மூலம் அல்லது மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும் தங்களுடைய மதிப்பெண்களை அறிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சிபிஎஸ்சி பிளஸ் 2 மாணவர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை தொடங்கிவிட்ட நிலையில் சிபிஎஸ்சி பிளஸ் 2 மாணவர்கள் இந்த மதிப்பெண்களை கணக்கில் கொண்டு கல்லூரிகளில் சேர்ந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மதிப்பெண்களில் திருப்தி இல்லாதவர்களுக்காக தனியாக தேர்வு நடத்தப்படும் என ஏற்கனவே சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவித்திருந்தது என்பது தெரிந்ததே.
























