Connect with us

தமிழ்நாடு

வேளச்சேரி ‘இவிஎம் பறிமுதல்’; சத்யபிரதா சாகு கொடுத்த ‘அடடே’ விளக்கம்- விளாசிய திருமா!!!

Published

on

தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது. இதைத் தொடர்ந்து அன்றே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைத்து அடைக்கும் பணிகள் நடைபெற்றன. இந்த வாக்குப்பதிவு இயந்திரங்களின் சீல்கள் மே 2 ஆம் தேதி நீக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்படும். இப்படியான சூழலில், சென்னை, வேளச்சேரி தொகுதியில் ஒரு நபர் பைக்கில் 3 வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச் சென்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது. நேற்று முன் தினம் இரவு இச்சம்பவம் நடந்துள்ள நிலையில், அதிமுக – பாஜகவினரே இதற்கு காரணம் என்று திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். 

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், ‘தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பெரும்பாலும் அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது. ஒரு சில இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டு சரி செய்யப்பட்டது. எனினும் எந்த ஒரு இடத்திலும் வாக்குப்பதிவு நிறுத்தப்படவில்லை. சிறப்பான முறையில் வாக்குப்பதிவு நடத்தி முடித்ததற்காகத் தலைமை தேர்தல் அதிகாரியையும் தேர்தல் பணியில் ஈடுபட்ட ஊழியர்களையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பாராட்டுகிறோம். அதேநேரத்தில் வாக்கு எண்ணப்படும் மையங்களில் வைக்கப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் பாதுகாப்பை தலைமைத் தேர்தல் அதிகாரி உறுதிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

கோடை வெயில்,  கொரோனா பாதிப்பு ஆகியவற்றுக்கு இடையில் சுமார் 75%  வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளுக்கு வந்து தமது வாக்குரிமையை நிலைநாட்டி இருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களைப் பாதுகாப்பது தொடர்பாக தேர்தல் ஆணையம் தெளிவான விதிமுறைகளை வகுத்திருக்கிறது. அந்த எந்திரங்கள் 2 பூட்டுகளால் பூட்டப்பட்டு போலீஸ் காவலில் வைக்கப்பட்ட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆனால் சென்னை வேளச்சேரி தொகுதியில்  வாக்குப்பதிவு முடிந்த பிறகு சென்னை மாநகராட்சி ஊழியர் இருவர் இருசக்கர வாகனங்களில் எவ்வித பாதுகாப்பும் இன்றி வாக்குப்பதிவு எந்திரங்களைக் கொண்டு சென்றுள்ளனர். அதைப் பார்த்த பொதுமக்கள் அவர்களை மடக்கிப் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்துள்ளனர். இதுகுறித்து கருத்துத் தெரிவித்திருக்கும் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அவர்கள் அவை வாக்குப் பதிவு செய்யப்படாத எந்திரங்கள் என்றும் அவற்றை கவனக்குறைவாகக் கையாண்டதற்காக அந்த மாநகராட்சி ஊழியர்களை இடைநீக்கம் செய்வதாகவும் தெரிவித்துள்ளார். இது ஏற்புடையதல்ல. வாக்குப்பதிவு எந்திரங்களை சட்டவிரோதமாக எடுத்துச் சென்றவர்கள் கைது செய்யப்பட வேண்டும். மற்ற எந்திரங்கள் பாதுகாப்பாக உள்ளனவா என்பதைத் தலைமைத் தேர்தல் அதிகாரி உறுதி செய்யவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்’ எனத் தெரிவித்தார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

குரு கடக ராசி பெயர்ச்சி 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் குவியும் காலம்!

வணிகம்6 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: அடிப்படை ஊதியம் ₹69,000 ஆக உயருமா? ஊழியர் சங்கங்களின் முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

குரு நட்சத்திரப் பெயர்ச்சி 2026: புனர்பூசம் 3ஆம் பாதம் – அதிர்ஷ்டம் குவிக்கும் 5 ராசிகள்!

வணிகம்6 மணி நேரங்கள் ago

தங்கம் விலை சரிவு: ஒரு வாரத்தில் 3% குறைவு – இன்னும் குறையுமா? நிபுணர்கள் சொல்வது என்ன?

செய்திகள்6 மணி நேரங்கள் ago

தமிழக ஆட்சி மாற்றம்: மகளிர் உரிமைத் தொகை தொடருமா? புதிய ரூ.2,500 திட்டம் எப்போது அமலுக்கு வரும்?

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

சுக்கிரன் திருவாதிரை நட்சத்திரப் பெயர்ச்சி (மே 20, 2026): திடீர் பண வரவு தரும் 4 அதிர்ஷ்ட ராசிகள்!

இந்தியா8 மணி நேரங்கள் ago

இன்றைய பிற்பகல் செய்திகள் – 06.05.2026

இந்தியா12 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 06.05.2026

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்15 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன்: 06 மே 2026 (புதன்கிழமை)

ஆன்மீகம்1 நாள் ago

தனுசு ராசி வார பலன் (மே 5–10, 2026): முன்னேற்றம், சுப நிகழ்வுகள், கவனிக்க வேண்டிய விஷயங்கள் & பரிகாரங்கள்

வணிகம்6 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

ஆரோக்கியம்6 நாட்கள் ago

கோடை வெயிலில் உடல் சூடு அதிகமா? உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் 3 அற்புத உணவுகள்!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக்குழு வருவதற்கு முன் டிஏ உயர்வு அறிவிப்பு.. 5வது, 6வது ஊதியக்குழு ஊழியர்களுக்கு பெரிய பலன்!

வணிகம்6 நாட்கள் ago

மே 1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு.. 17% வரை அதிகரிக்க வாய்ப்பு!

செய்திகள்6 நாட்கள் ago

எல்பிஜி சிலிண்டர் புக்கிங்கில் புதிய விதி.. மே 1 முதல் 25 நாள் காத்திருக்க வேண்டும்!

வணிகம்3 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (03/05/2026)!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக்குழு கூட்டத்தில் முக்கிய பேச்சுவார்த்தை.. மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய சம்பள உயர்வு வருமா?

சினிமா6 நாட்கள் ago

டிஜிட்டலில் மீண்டும் வரும் ‘மூன்றாம் பிறை’.. அமேசான் பிரைமில் வெளியாகும் கமல் – ஸ்ரீதேவி கிளாசிக் படம்!

வணிகம்3 நாட்கள் ago

PF பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்யலாமா? பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் முக்கிய எச்சரிக்கை!

செய்திகள்3 நாட்கள் ago

தமிழக தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடக்கம்: பலத்த பாதுகாப்பு ஏற்பாடு!

Translate »
🧠 johns hopkins center for psychedelic research. Jouw freelance grafisch ontwerper bram heldens staat voor je klaar. Łódzkiej w zgierzu kopnął w metalowy kosz na śmieci, który następnie uderzył w drzwi stojącego autobusu.