Connect with us

தொழில்நுட்பம்

Gmail-ஐ தாக்கும் விஷமிகள்; கூகுள் நிறுவனம் எச்சரிக்கை!

Published

on

உலகின் பெரும்பாலான தனிநபர்கள் பயன்படுத்தும் மின்னஞ்சல் சேவையாக Gmail உள்ளது. இந்நிலையில் அதன் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட Gmail பயனர்களுக்கு விஷமிகள் ஊடுருவல் குறித்த எச்சரிக்கை தகவலைக் கூகுள் அனுப்பியுள்ளது.

மர்ம விஷமிகள், கூகுள் நிறுவனத்திலிருந்து அனுப்புவது போலவே வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சல் அனுப்புவதாகவும், அதில் கடவுச்சொல்(Gmail Password) உள்ளிட வேண்டும் என்று கேட்கப்படும். அப்போது உன்மை என்ன என்று தெரியாமல் கடவுச்சொல்லை அளித்தால், உங்கள் Gmail தகவல்கள் திருடு போகும் என்று கூகுள் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இந்த விஷமிகள் எச்சரிக்கை மின்னஞ்சல் 500 பேருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அமெரிக்கா, கனடா, ஆப்கானிஸ்தான், தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது என்று தகவல்கள் கூறுகின்றன.

மேலும் இந்த மின்னஞ்சல் பெற்றவர்களுக்கு கூகுள் உயர் பாதுகாப்பு திட்டம் ஒன்றையும் அறிமுகம் செய்துள்ளது. அதில் இணைபவர்களின் Gmail கணக்குகள் மேலும் பாதுகாப்பாக இருக்கும்.

எனவே உங்கள் Gmail-க்கு வரும் தேவையில்லாத மின்னஞ்சல்களை எப்படி தவிர்ப்பது என்று இங்கு பார்ப்போம்.

பாதுகாப்பாக மின்னஞ்சல் சேவையை பெற, தேவையில்லாத மின்னஞ்சல்களை தவிர்க்க மின்னஞ்சல் முகவரிகளை பிளாக் செய்வது(blocking an email address) மற்றும் மின்னஞ்சல்கள் குழுவிலகுவது (Unsubscribe from mass emails) என்று இரண்டு சேவைகள் உள்ளன.

மின்னஞ்சல் முகவர்களை பிளாக் செய்வதன் மூலம் குறிப்பிட்ட முகவரியிலிருந்து எந்த மின்னஞ்சலும் உங்களுக்கு வராமல் தடுக்க முடியும். அடுத்து நாம் சில இணையதளங்களில் பதிவு செய்யும் போது அவர்களது குழு மின்னஞ்சலில் நமது மின்னஞ்சல் முகவரியும் சேர்ந்து இருக்கும். அவர்கள் நமது மின்னஞ்சல் விவரங்களைக் காசுக்காக விற்கவும் வாய்ப்புகள் உண்டு. எனவே, இப்படி உங்களுக்குத் தேவையில்லாத சேவைகளிலிருந்து வரும் குழு மின்னஞ்சல்களிலிருந்து விலக வேண்டும்.

இவற்றைச் செய்த பிறகும், உங்கள் மின்னஞ்சல் முகவரி தொடர்ந்து விஷமிகளின் தாக்குதலுக்கு உள்ளானால் அது குறித்து சைபர் க்ரைம் காவல் துறையினரிடம் புகார் அளிக்கலாம்,

எப்படி மின்னஞ்சல் முகவரிகளை பிளாக் செய்வது?

படி 1: உங்கள் கணினியில் Gmail கணக்கை திறக்கவும்.
படி 2: உங்களுக்கு வந்த தேவையில்லா மின்னஞ்சலை திறக்கவும்.
படி 3: உங்கள் மின்னஞ்சல் கணக்கின் வலது புறத்துக்கு மேலே உள்ள, மேலும் என்ற பொத்தனை கிளிக் செய்து, Block என்பதை தேர்வு செய்யவும். ஒருவேலை தவறாக பிளாக் செய்துவிட்டால் அவர்களை தேவைப்பட்டால் unblock-ம் செய்துகொள்ளலாம்.

குழுவிலகுவது எப்படி?

படி 1: உங்கள் கணினியில் Gmail கணக்கைத் திறக்கவும்.
படி 2: குலுவிலகுவதற்கான மின்னஞ்சலை திறக்கவும்.
படி 3: பின்னர் அந்த மின்னஞ்சலில் உள்ள Unsubscribe அல்லது Change preferences என்பதை கிளிக் செய்து குழுவிலிருந்து விலகிவிடலாம்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா2 மணி நேரங்கள் ago

மக்களவை தொகுதிகள் மறுவரையறை மசோதா – பர பர அரசியல் நிகழ்வுகள்

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

அக்ஷய திருதியை 2026: தங்கம் விலை ரூ.4,000 வரை உயரும்? வாங்க சிறந்த நேரம் & முழு விவரம்!

வணிகம்7 மணி நேரங்கள் ago

மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ உயர்வு 2026: 60% வரை ஏற்றம், அரியர்ஸ் எப்போது? முழு விவரம்!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

சூரியன் மேஷ ராசி பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் தொடக்கம் – அதிர்ஷ்டம் உச்சத்தில்!

வணிகம்8 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு 2026: ரூ.69,000 குறைந்தபட்ச சம்பளம், OPS மீண்டும் – மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய அப்டேட்!

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

மேஷ ராசியில் சூரியன் பெயர்ச்சி 2026: இன்று முதல் இந்த 6 ராசிகளுக்கு பொற்காலம் தொடக்கம்!

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 16 ஏப்ரல் 2026: திதி, நட்சத்திரம், நல்ல நேரம், ராகு காலம் முழு விவரம்!

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் 16 ஏப்ரல் 2026: 12 ராசிகளுக்கான முழுமையான பலன்கள் – வேலை, பணம், குடும்ப நிலை எப்படி?

வணிகம்17 மணி நேரங்கள் ago

8வது ஊதிய கமிஷன்: குறைந்தபட்ச சம்பளம் ரூ.69,000 ஆக உயருமா? முக்கிய பரிந்துரைகள் வெளியீடு!

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

மே 11 கிரக சேர்க்கை 2026: சூரியன்-செவ்வாய் இணைப்பு – 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காலம்!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2026: 350 சிறப்பு அதிகாரி பணியிடங்கள் – ரூ.1 லட்சம் வரை சம்பளம்!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

சென்னை ஐஐடி வேலைவாய்ப்பு 2026: ரூ.18,000 சம்பளத்தில் Junior Executive பணிகள் – உடனே விண்ணப்பிக்க!

இந்தியா6 நாட்கள் ago

ஜனநாயகன் படத்தை பதிவிறக்கம் செய்பவர்கள் மற்றும் பகிர்வோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

பஞ்சாப் & சிந்து வங்கி வேலைவாய்ப்பு 2026: 1000 Local Bank Officer பணிகள் – டிகிரி முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்க!

இந்தியா6 நாட்கள் ago

G Pay யில் “Pocket Money” என்பது தற்போதைய UPI Circle போன்ற ஒரு புதிய அம்சமாகும்.

இந்தியா7 நாட்கள் ago

இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்களின் கைகளில் – ஆனால் அந்த கைகளில் இன்று வேலை வாய்ப்பு இல்லை

இந்தியா6 நாட்கள் ago

ஜப்பானியர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு – முதியவர்கள் கீழே விழுவதைத் தடுக்கும் ரோபோட்டிக் வால்

இந்தியா5 நாட்கள் ago

நமக்கு வரும்; மெசேஜ் இன்பாக்சில் இவற்றின் ரகசியம் உங்களுக்குத் தெரியுமா?

இந்தியா7 நாட்கள் ago

ரயிலில் தேநீர் அதிக விலைக்கு விற்ற சம்பவம் வைரல்: IRCTC கடும் நடவடிக்கை

வணிகம்7 நாட்கள் ago

11 நாட்களில் பணம் இரட்டிப்பாகும் என ஆசையில் ரூ.12.31 கோடி இழந்த மருத்துவர் சைபர் மோசடி அதிர்ச்சி

Translate »
Sprawozdanie rady osiedla zawierało przykłady konkretnych działań i tym samym było lepsze niż osiedla nr i. Cəlilabadda 8 mart beynəlxalq qadınlar günü münasibətilə tədbir keçirilib.