தொழில்நுட்பம்
இந்தியாவின் திட்டத்தை அமெரிக்காவிற்குப் பரிந்துரைத்த கூகுள்!
பணப் பரிவர்த்தனை செய்வதற்காக, இந்தியாவில் கடந்த மூன்று ஆண்டுகளாக வழங்கப்பட்டு வரும் யூபிஐ போன்ற ஒரு சேவையை அமெரிக்காவில் அறிமுகம் செய்யுமாறு சுந்தர் பிச்சை தலைமையிலான கூகுள் நிறுவனம் அமெரிக்க ஃபெடரல் சிரர்வ் வங்கியிடம் கோரிக்கை வைத்துள்ளது.
இந்தியாவில் யூபிஐ மூலம் பணம் செலுத்தும் முறை அறிமுகம் செய்யப்பட்டதால், கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவின் ஜிடிபியில் 19 சதவீதம் வரை பங்கு வகிப்பதாகக் கூகுள் தெரிவித்துள்ளது.
2016-ம் ஆண்டு வரை இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்த ரகுராம் ராஜனின் பதவிக் காலம் முடியும் முன்பு, அவரால் அறிமுகம் செய்யப்பட்ட ஒரு எளிமையான பண பரிவர்த்தனை சேவையே யூபிஐ திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த யூபிஐ சேவையைப் பயன்படுத்தித் தான் கூகுள் பே செயல்பட்டு வருகிறது என்பது அனைவரும் அறிந்த ஒன்று.