இந்தியா
மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

- சஸ்பெண்ட் செய்யப்பட்ட டாஸ்மாக் ஊழியர்களை மீண்டும் பணியில் சேர்க்கக் கோரி 2000க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளை மூடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம். அவர்களுக்கு தமிழ்நாடு அரசு உடனடியாக பணிக்கு திரும்ப அறிவுறுத்தி நோட்டீஸ் அளித்துள்ளது.
- ஆகஸ்ட் 4-ம் தேதி தாய்லாந்தில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தை தாறுமாறாக இயக்கிய தலைமை விமானி, கஞ்சா உபயோகித்து இருந்தது ஆய்வின் முடிவில் தெரிய வந்துள்ளது.!
- வருவாய்துறையில் வரலாற்று மாற்றம்.. தாசில்தாருக்கு பதில் துணை தாசில்தார்.. அதிகாரமே அடியோடு மாறியது முதல் பட்டதாரி சான்றிதழ், கைவிடப்பட்ட பெண் சான்றிதழ் உள்ளிட்ட 12 சான்றிதழ்களை வழங்கும் அதிகாரம் தாசில்தாருக்கு பதில் துணை தாசில்தாருக்கு வழங்கப்பட்டுள்ளது.
- 2021ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் வேளச்சேரி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் முன்னால் எம்எல்ஏ அசன் மவுலானா தேர்தல் செலவுக் கணக்கை முறையாக சமர்ப்பிக்க தவறியதால் தேர்தல் ஆணையம் 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை விதித்துள்ளது.
- மதுப் பழக்கத்தைக் காரணம் காட்டி காப்பீட்டுத் தொகையை சிராகரிக்க முடியாது. – நுகர்வோர் ஆணையம் தீர்ப்பு.
- நேபாள் பெருவெள்ளத்தில் ஈஷா சார்பில் கைலாஷ் யாத்திரை அழைத்துச் செல்லப்பட்ட சுமார் 80 பேர் உயிரிழந்துள்ளனர். இதையொட்டி பலவிதமான சர்ச்சைகள் சுழன்றடிக்கின்றன.



