இந்தியா
வாகன விபத்து-பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டுத்தொகை – திருத்திய வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்.

நாடு முழுவதும் உள்ள வாகன வித்துக்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு மற்றும் நிவாரணத்தொகை வழங்க ஒரே மாதிரியான நடைமுறையை பின்பற்றுவதற்காக உரிய திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை உச்சநீதிமன்றம் புதன்கிழமை அன்று வெளியிட்டது.
வாகன விபத்தில் உயிரிழந்தவர்கள் அல்லது காயமடைந்தவர்களின் ஆண்டு வருமானத்தை அவர்கள் தாக்கல் செய்த வருமானவரி கணக்கின் அடிப்படையில் கணக்கிட்டு நிவாரணத் தொகையை நீதிமன்றங்கள் எவ்வாறு நிர்ணயிக்க வெண்டும் என்பதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டு நீர்ப்பளிக்கப்பட்டது.
வாகன விபத்தில் உயிரிழந்தவர்களின் ஆண்டு வருமானத்தை கணக்கிட மிக்க் கடினமான மற்றும் விவரமான நடைமுறைகள் என ஏதுமில்லை. உயிரிழந்தவர்களின் ஆண்டு வருமானத்தை கணக்கிடுவதில் முக்கிய ஆவணமாக வருமானவரிக் கணக்கு திகழ்கிறது. அதனடிப்படையில் மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நிவாரணம் நிர்ணயிக்கப்படுகிறது.
விபத்தில் உயிரிழப்பவர் ஊதியம் பெறுபவராக இருப்பின் அவர் தாக்கல் செய்த முந்தைய ஆண்டின் வருமானவரி கணக்கு அடிப்படையில் ஆண்டு வருமானத்தை எடுத்துக் கொள்வது போதுமானது. பதவி உயர்வால் ஏற்படும் நிதி தாக்கத்தை கருத்தில் கொண்டே முந்தைய ஆண்டின் வருமான வரி கணக்கை எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒருவேளை விபத்தில் உயிரிழப்பவர் சுயதொழில் செய்பவர் அல்லது தொழிலதிபராக இருந்தால் அவர் உயிரிழப்பதற்கு முந்தைய மூன்று ஆண்டுகளில் தாக்கல் செய்யப்பட்ட வருமானவரிக் கணக்கின் சராசரியை ஆண்டு வருமானமாக எடுத்துக் கொள்ளலாம். சுயதொழில் மற்றும் வணிகத்தில் கிடைக்கும் வருமானத்தில் ஆண்டுக்கு ஆண்டு வேறுபாடுகள் இருக்கலாம் என்பதால் இந்த நடைமுறையை பின்பற்றுவது சரியாக இருக்கும்.
இவ்வாறு அந்த தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.













