இந்தியா
இந்திய ரயில்வே தறையில் 2 % ஊழியர்களை குறைக்க வேண்டும் என ஒன்றிய அரசு உத்தரவு

இந்திய ரயில்வே தறையில் 2 % ஊழியர்களை குறைக்க வேண்டும் என ஒன்றிய அரசு உத்தரவு. பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் இதன் மூலம் பணி இழக்க நேரிடும் என அச்சம்.
இந்திய ரயில்வே வாரியம் 24.04.2026 அன்று வெளியிட்ட சுற்றறிக்கையில் Manpower Rationalisation Target for 2026-27 என்ற திட்டத்தின் படி இந்திய நாடு முழுதும் உள்ள 13க்கும் மேற்பட்ட ரயில்வே வாரியங்களில் பணியாற்றும் பணியாளர்களை ஆட்குறைப்பு செய்ய திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. அணைத்து ரயில்வே வாரிய பொது மேலாளர்களுக்கும் இந்த சுற்ற்றிக்கை அனுப்பப் பட்டுள்ளதாக தெரிகிறது.
இதன்படி தற்போது பணிபுரியும் பணியாளர்களில் 2 சதவீதம் பேரை 2026-27 ம் நிதி ஆண்டு நிறைவு பெறும் முன்னதாக ஆட்குறைப்பு செய்ய திட்டமிட்டுள்ளது.
தற்போது நாட்டிலேயே அதிக அளவு பணியாளர்கள் பணிபுரியும் நிறுவனமாக இந்திய ரயில்வே உள்ளது. அப்படிப்பட்ட இந்த இந்திய ரயில்வேயில் அணைத்து மண்டலங்களையும் சேர்த்து மொத்தம் 11,75,925 பணியாளர்கள் தற்போது பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் 2 சதவீதம் பேர் ஆட்குறைப்பு செய்வதாக இருந்தால் 23,519 பேர் மற்றும் தற்காலிக பணியாளர்களில் 6089 பேரும் ஆக மொத்தம் 29,608 பேர் தங்களது பணியை இழக்க நேரிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் தெற்கு ரயில்வேயில் மட்டும் 1906 பேர் குறைக்கப்பட உள்ளனர்.
இந்த ஆட்குறைப்பு என்பது தற்காலிக பணியாளர்கள் பணி நீக்கம் மற்றம் நிரந்தர பணியாளர்களுக்கு விருப்ப ஓய்வு மற்றும் கட்டாய ஓய்வு ஆகிய திட்டங்களின் மூலம் பணியாளர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட உள்ளதாக தெரிய வருகிறது.
ஓய்வுதியம் பெறத் தகதியுள்ள பணியாளர்கள் தங்களுக்கு ஓய்வுதிய பயன்கள் முழுமையாக கிடைக்குமா என்ற அச்சத்தில் இருக்கின்றனர்.
















