செய்திகள்
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை: மனுக்களின் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்து கொள்ளலாம்?

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்து ஏற்கனவே மனு கொடுத்தவர்கள், தங்களின் மனுவின் நிலையை இனி வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் சரிபார்க்க முடியும்.
தமிழ்நாடு அரசு “உங்களுடன் ஸ்டாலின் முகாம்” என்ற திட்டத்தின் மூலம், மக்களுக்கு தேவையான பல்வேறு சேவைகளை நேரடியாக வழங்கி வருகிறது. இந்த முகாமில் சாதி சான்று, பட்டா மாற்றம், பென்ஷன், மகளிர் உரிமைத் தொகை, மருத்துவ காப்பீட்டு அட்டை, ஆதார் திருத்தம், ரேஷன் அட்டை திருத்தம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கான மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கவும், அதற்கான மனுக்களை முகாம்களில் பெறவும் அரசு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. தகுதியான பெண்கள் தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
ஏற்கனவே மனு கொடுத்தவர்கள் தங்களின் விண்ணப்ப நிலையை தெரிந்து கொள்ள:
ungaludanstalin.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
அங்கு “தங்களின் மனுவின் நிலையை அறிய” என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
அதன் பிறகு cmhelpline.tnega.org என்ற முதலமைச்சர் முகவரி பக்கத்திற்கு செல்லப்படும்.
அங்கு Sign Up செய்து, பெயர், மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
பின்னர் Track Grievance ஆப்ஷனில் மொபைல் எண் மூலம் லாகின் செய்து மனுவின் நிலையை எளிதாக அறியலாம்.
இவ்வாறு, மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதா, பரிசீலனையில் இருக்கிறதா அல்லது அங்கீகரிக்கப்பட்டதா என்பதை சில நிமிடங்களில் ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம்.



















