வணிகம்
அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான PM-SYM ஓய்வூதிய திட்டம் – மாதம் ரூ.3,000 ஓய்வூதியம் உங்களுக்கும் கிடைக்கும்!
Published
10 மாதங்கள் agoon
By
Poovizhi
அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான நிதி பாதுகாப்பை உறுதி செய்ய, மத்திய அரசு “பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மான்-தன்” (PM-SYM) ஓய்வூதியத் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. தெருவோர வியாபாரிகள், வீட்டு உதவியாளர்கள், ரிக்ஷா ஓட்டுநர்கள், விவசாய கூலிகள், கட்டுமானத் தொழிலாளர்கள் போன்றோர் இதில் பயன்பெறலாம்.
இந்தத் திட்டத்தின் மூலம், சந்தாதாரர் 60 வயதான பிறகு மாதம் ரூ.3,000 ஓய்வூதியம் பெறலாம். அவர் இறந்துவிட்டால், அவரது வாழ்க்கைத்துணைக்கு ரூ.1,500 குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும்.
இந்தத் திட்டம் 50:50 பங்களிப்பு முறையில் செயல்படுகிறது – சந்தாதாரர் செலுத்தும் தொகைக்கு நிகரான தொகையை மத்திய அரசும் வழங்கும். 18 முதல் 40 வயதுக்குள் இருக்கும், மாத வருமானம் ரூ.15,000க்கு கீழான தொழிலாளர்கள், வருமான வரி அல்லது பிற ஓய்வூதிய திட்டங்களில் உறுப்பினராக இல்லாதவர்கள் தகுதியுடையவர்கள்.
மாதாந்திர பங்களிப்பு எடுத்துக்காட்டு:
18 வயதில் சேர்ந்தால் – மாதம் ₹55
25 வயதில் – மாதம் ₹80
40 வயதில் – மாதம் ₹200
விண்ணப்பிக்கும் முறை:
அருகிலுள்ள பொது சேவை மையத்தில் (CSC) ஆதார் அட்டை, வங்கி கணக்கு விபரத்துடன் செல்லவும். VLE மூலம் பதிவு செய்து, பயோமெட்ரிக் உறுதிப்படுத்தலுடன் சேர்க்கை முடிக்கலாம். உங்கள் ஷ்ரம் யோகி அட்டை வழங்கப்படும்.
வெளியேறும் வாய்ப்பு:
10 ஆண்டுகளுக்குள் விலகினால், செலுத்திய தொகையும் வட்டியும் திருப்பிக் கொடுக்கப்படும். 60 வயதுக்கு முன் விலகினாலும் அதே போன்று நிவாரணம் வழங்கப்படும். சந்தாதாரர் இறந்தால், வாழ்க்கைத்துணைக்கு திட்டத்தைத் தொடரும் வாய்ப்பும், விலகும் வாய்ப்பும் உண்டு.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.










