செய்திகள்
விவசாயிகளுக்கு களையாக இருந்த அ.தி.மு.க. – முதல்வர் ஸ்டாலின் கடும் தாக்கு!

ஈரோடு:
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், ஈரோடு பெருந்துறையில் நடைபெற்ற வேளாண் கண்காட்சி நிகழ்ச்சியில் பேசிய போது, அ.தி.மு.க. ஆட்சியினை விவசாயிகளுக்கு துரோகம் செய்தது என கடுமையாக விமர்சித்தார்.
“பயிர்களுக்கு இடையே முளைக்கும் களையாக தான் அ.தி.மு.க. ஆட்சி இருந்தது” என சாடிய முதல்வர், அந்த ஆட்சியில் விவசாயிகள் பல்வேறு பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டனர் என்றும், இன்று நிலைமை முற்றிலும் மாறியுள்ளது என்றும் கூறினார்.
விவசாய வளர்ச்சியில் சாதனை:
இந்தியாவின் மஞ்சள் தலைநகராக இருக்கும் ஈரோடு மாவட்டம், தமிழ்நாட்டில் வேளாண் வளர்ச்சியில் 8வது இடத்தில் உள்ளது.
தமிழ்நாடு அரசின் வரலாற்றில் முதன்முறையாக வேளாண்துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 4 ஆண்டுகளில் 458 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தி செய்துள்ளோம்.
ஸ்டாலின் பேச்சின் முக்கிய அம்சங்கள்:
“நாங்கள் போலி விவசாயிகள் அல்ல. தோளில் பச்சை துண்டு போட்டு வேஷம் போடுவதில் நாங்கள் ஈடுபடவில்லை.”
“விவசாயிகளுக்கு எந்த பிரச்சனை ஏற்பட்டாலும், முதலாவதாக துணை நிற்பவர் நான்தான்.“
“முந்தைய ஆட்சியில் விவசாயிகள் தற்கொலை செய்த சம்பவங்கள் அதிகம். ஆனால் இப்போது நிலைமை மாறியுள்ளது.”
“திராவிட மாடல் 2.0 ஆட்சி தான் மீண்டும் அமையும். உழவர்களை காக்கும் அரசு தான் இப்போது இருக்கிறது.”























