சினிமா செய்திகள்
எனக்கு பாதுகாப்பு வேணும்- நடிகை கௌதமி!

பாதுகாப்பு கேட்டு நடிகை கௌதமி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
வாட்ஸ் அப் குழுவில் வழக்கறிஞர்கள் என்ற பெயரில் சிலர் மிரட்டுவதாக நடிகை கெளதமி குற்றம் சாட்டியுள்ளார்.
நடிகை கௌதமி அளித்துள்ள மனுவில், “தனது வாட்ஸ்-ஆப் குரூப்பில் வழக்கறிஞர்கள் என்ற பெயரில் சிலர் மிரட்டுகின்றனர். வரும் 15ஆம் தேதி நீலாங்கரை காவல் நிலையத்திற்கு முன்பு சட்ட உதவி சங்கம் என்ற அமைப்பின் பெயரில் எனக்கு எதிராக இந்த நிலத்தில் உள்ள கட்டுமானத்தை இடிப்பது தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக கூறி போஸ்டர் அனுப்பி மிரட்டுகின்றனர். எனவே மிரட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.















