இந்தியா
5 மாநில சட்டமன்ற தேர்தல் எப்போது? பிப்ரவரி 4-ல் தேர்தல் ஆணைய உயர்மட்ட ஆலோசனை

தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்கு வங்காளம், கேரளா மற்றும் அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல்களை முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையம் பிப்ரவரி 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தை நடத்த உள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தல் தயாரிப்புகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், வாக்குப்பதிவு செயல்முறை மற்றும் தளவாட வசதிகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட உள்ளது.
இதற்காக மூத்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், மாநில உள்துறை செயலாளர்கள், தேர்தல் பார்வையாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கூட்டத்தில் கட்டாயமாக கலந்து கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க தவறினால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.
வரவிருக்கும் சட்டமன்ற தேர்தல்களை சீரான முறையில், வெளிப்படையாக மற்றும் நியாயமான வகையில் நடத்துவதற்கான முக்கியமான ஆலோசனையாக இந்த கூட்டம் கருதப்படுகிறது.




















