தமிழ்நாடு
சென்னை உள்பட 10 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை: அதிரடி அறிவிப்பு!
புயல் காரணமாக சென்னை உள்பட 10 மாவட்டங்களுக்கு நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் தோன்றிய ’மாண்டஸ்’ என்ற புயல் நாளை கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இதனை அடுத்து நாளை முதல் கனமழை முதல் மிக கனமழை வரை பல்வேறு மாவட்டங்களில் பெய்ய வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று ஏற்கனவே தஞ்சை, திருவாரூர் மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப் பட்ட நிலையில் நாளை சென்னை உள்பட 10 மாவட்டங்களுக்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சில மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரி விடுமுறை அளிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.