Connect with us

ஆன்மீகம்

பொருநை நதிக்கரையில் சொரிமுத்து அய்யனார் கோவில்

Published

on

பொருநை நதிக்கரையில் உள்ள சொரிமுத்து அய்யனார் கோவில் குறித்து தென் தமிழகம் சார்ந்த… நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டடத்தில் தெரியாத நபரே இருக்க முடியாது.  இந்த அய்யன் கோவிலை சாஸ்தா கோவில் என்றும் வழங்கி வருகிறோம். இங்கு அய்யன் சிவலிங்க வடிவமாக இருப்பார்.

இதே போல் சாஸ்தா கோவில் சிறுபான்மை ஆற்றங்கரையிலும் பெரும்பான்மை குளத்துக் கரையிலும் வைத்து வணங்கி வருகின்றனர். பெரும்பாலுமே இத்தெய்வங்கள் காவல் தெய்வங்களாகவே இருக்கும்.

சொரிமுத்து அய்யனார் கோவிலைப் பொறுத்த வரை காலத்திலே மழை பெய்ய தாமதிக்குமானால் உடனே ஊரார்கள் ஒன்று கூடிகிறார்கள். அய்யனுக்கு பூஜை செய்து ஏழைகளுக்கு அன்னதானம் வழங்குகிறார்கள்.  உடனே மழை பெய்வதை பார்த்து மகிழ்கின்றனர். நாம் ஏற்கனவே கூறியது போல அதிகாரிகளும் இதற்கு விதிவிலக்கல்ல.  இது போல் அருள் பொழிந்து மழை சொரிவதனால் சொரி முத்து அய்யன் என்று இவர் பெயர் பெற்றார். சொரிதல், பொழிதல் என்பது குறித்து கூறும் போது முத்து என்பது விலை மதிக்க முடியாத பெரும் பொருள். (மழையை முத்து மழை என்றும் கூறுவர்) அது போல் சொரிமுத்து அய்யனாரின் திருவருளும் விலை மதிக்க முடியாது. ஆகவே இந்த கோயிலுக்கு வந்து சொரி முத்து அய்யனை வேண்டி விலை மதிக்க முடியாத திருவருளை பெற்று செல்கிறார்கள் தமிழகத்தில் இருந்து கேரள பக்தர்கள் வருவதுண்டு…

மணிமுத்தாறு

இந்த சொரிமுத்து அய்யனார் கோவில் செல்ல லோயர் கேம்பில் இருந்து அப்பர் கேம்ப் செல்லும் வழியில் இடது புறம் செல்லும் ரோட்டில் திரும்ப வேண்டும். பின் அந்த வழியாக சென்று ஆற்றை கடந்து அந்தப்புறம் சென்றால் அங்கு அய்யனார் கோயில் உள்ளது.

இந்த கோவில் தமிழகத்தை பூர்விகமாக கொண்ட மிகவும் பழமையான சிங்கம்பட்டி ஜமீன் என்ற குறுநில மன்னரின் வழித்தோன்றலை சேர்ந்தது.

ஆடி அமாவாசை அன்று இக்கோவிலில் விழா மிகச்சிறப்பாக நடக்கும். இந்த கோயிலில் கொட்டும் மழையில் ஆண்களும் பெண்களும் பாணதீர்த்தம் சென்று அங்கு நீராடுவார்கள். பாணதீர்த்தம் செல்ல முன்பு இந்த கோயிலில் இருந்து பாதை இருந்தது. அந்த வழியாக பாணதீர்த்தத்தில் குளித்து விட்டு பின் சொரிமுத்து அய்யனாரை வணங்கி வந்தனர். அவர்கள் தோளிலும், இடுப்பிலும் சிறு குழந்தைகளை தூக்கிக்கொண்டு வருவார்கள். குடு குடு என குளிரில் ஆடி வரும் முதியவர்களும் வாணதீர்த்தம் சென்று நீராடியே வருவார்கள். பல பிரச்சனைகளை மனதில் சுமந்து கொண்டு அதில் இருந்து தீர்வு வேண்டும் என்று ஆடி அமாவாசையில் பொழியும் மழையில் நனைந்து கொண்டு அய்யனை வணங்கி அருள் பெறும் பக்தர்கள் மிக ஏராளம்.

தாமிரபரணியில் வந்து முதன் முதலில் சமவெளியில் கலக்கும் ஆறு மணிமுத்தாறு தான்.  இந்த மணிமுத்தாற்றைப் பொறுத்தவரை தான் செல்லும் வழியை தானாகவே ஏற்படுத்திக்கொண்டு வந்தது ஆகும். இந்த ஆறு….  மணி ஆகவும், முத்தாகவும் ஓடி வருவதால் *”மணிமுத்தாறு”* என்று அழைக்கப்படுகிறது.  எனவே மணியைப் போலவும்,  முத்தைப் போலவும் மிகத் தெளிந்த நீரை சுமந்து வருவதால் இப்பெயர் பெற்றிருக்கலாம் என திருநெல்வேலி ஜில்லா கோவில் வரலாற்று ஆசிரியர் கூறுகிறார்.

மணிமுத்தாறு தண்ணீரைப் போன்று உலகில் தண்ணீர் கிடையாது என பல புலவர்களால் போற்றப்படுகிறது.

சிங்கம்பட்டி

மணிமுத்தாறு ஓடி வரும் பகுதியில் இரு கரையிலுமே நெல்லி மரங்கள் மிக அதிகமாக இருப்பதாலும் இதன் தண்ணீர் சுவையாக இருக்கிறது என்ற கருத்தும் நிலவி வருகிறது.

மணிமுத்தாறு தாமிரபரணி ஆற்றில் கலப்பதற்கு இரண்டு மைலுக்கு மேலே இருக்கும் ஊர் சிங்கம்பட்டி.

பட்டி என்றால் சிற்றூர். பட்டணம் என்பது பேரூர். அதாவது ஊர், நகர் என்பதை ஊர்தல், நகர்தல் எனக் கொண்டாலும் கூட இரண்டுமே ஒரே பொருளுடைய சொற்களாக இருக்கிறது.

ஆகவே சிறிய ஊரை ஊர் என்று அழைக்கிறார்கள். பெரிய அளவில் உள்ள ஊரானது நகர் என்று பெயர் பெற்று விட்டது. அதன்படி சிங்கம்பட்டி சிறிய ஊராக உள்ளது. ஆகவே இதை ஊர் என்று கூறுகிறோம். ஆனாலும் இந்த ஊர் மிகவும் விசேஷமானது.

விக்கிரமசிங்கன்

இப்பகுதியில் ஆண்டு வந்த விக்கிரமசிங்கன் என்ற குறுநில மன்னருடைய பெயரால் உருவாக்கப்பட்ட ஊர் சிங்கம்பட்டி.  இந்த பரம்பரையில் வாழ்ந்த மன்னர்கள் மிகவும் பக்தி வாய்ந்தவர்கள்.  இவ்வூரை தலைமை ஊராகக் கொண்டு ஆட்சி செய்த மன்னர்களால் அமைக்கப்பட்டது மாகதேவர்-அகஸ்தீசுவரர் ஆலயம்.

இந்த பகுதியில் ஆண்ட மன்னர்கள் இந்த ஆலயத்தில் சிவபெருமானையும், அம்மையையும் பொன்னாலும், பூவாலும் அலங்கரிப்பார்கள். பின் தம் தோளில் சுமந்து செல்வர். இன்ப கண்ணீர்  வடித்தும் இன்னிசை பாடி வாழ்த்தியும் சிவனை வாழ்த்து பாடி நல்ல வாழ்க்கை வாழ்ந்து உள்ளனர்.

தீர்த்தபதி

தற்சமயம் பாணதீர்த்தம் மற்றும் கல்யாண தீர்த்தம் போன்ற தீர்த்தம் உள்ள இடங்கள் இந்த குறுநில மன்னர்களுக்கு சொந்தமானது. தீர்த்த்த்திற்கு அதிபதியானதால் தான் சிங்கம்பட்டி ஜமீன்களுக்கு தீர்த்தபதி என்ற பெயர் வந்துள்ளது.  இவர்கள் இடத்திற்குள் தான் சொரிமுத்து அய்யனார் கோயில் உள்ளது.

சொரிமுத்து அய்யனார்

தாமிரபரணி ஆற்றின் கீழக்கரையிலே சொரிமுத்து அய்யனார் கோயில் உள்ளது. இவர் தாமிரபரணி ஓடி வரும் பள்ளத்தாக்கிற்கு பாதுகாவலாய் உள்ளார். இதே போல் செங்கோட்டைக்கு மேல்புறம் இருக்கும் பள்ளத்தாக்கில் ஆரியங்காவுக்கு பாதுகாவலாக ஆரியகாவு சாஸ்தா அமர்ந்து அருள் புரிகிறார். சொரிமுத்து அய்யனார் கோயில் காசிக்கு நிகரான தலம்.

பட்டவராயர்

இந்த கோயிலில் உள்ள கோயில்களில் முக்கிய கோயில் பட்டவராயர் கோயில் . இந்த கோயிலில் உள்ள தெய்வமான முத்துபட்டனை பக்தர்கள் பட்டவராயர் என்று அழைத்து வருகின்றனர். பட்டவராயர் கோயிலில் பக்தர்கள், இவருக்கு காலணிகளை காணிக்கைகளாக அளித்து வருகின்றனர்.  காணிக்கையாக அளிக்கப்பட்ட செருப்புகள் தேய்வது ஒரு விந்தையான அதிசயமாக விசயமாகும்.

பெரும்பாலும் தொங்க போட்ட செருப்புகளில் சகதிகள் சேர்ந்த மண்ணும், புல்லும் சிறு மிருகங்களின் உடற்கழிவுகளும் ஒட்டி கொண்டிருப்பது புதிராகவே உள்ளது.

பட்டவராயர் சன்னதியில் பொம்மக்கா.. திம்மக்கா சிலைகளும் அந்த கருவறையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கோவிலில் தை அமாவாசை, மாசி அமாவாசை, ஆடி அமாவாசை ஆகிய விசேஷ நாட்களிலும், அமாவாசை தினங்களிலும் பக்தர்கள் கூடுவார்கள்.

அது மட்டுமல்லாமல் ஆடி அமாவாசை தினங்களில் கோமரத்தார் தன் உணர்வை மறந்து ஈஸ்வரன் உணர்வை உணர்த்துவார்கள்.

இதற்காக பூக்குழி இறங்குவர். இதற்காக பூதத்தார், தளவாய் மாடசாமி, பட்டவராயன் ஆகிய சன்னதிகள் முன்பு 3 கட்டமாக இந்த பூக்குழி திருவிழா மிகச்சிறப்பாக நடக்கும்.

பெரும்பாலும் சைவ படைப்பை விரும்பும் தெய்வநிலை இந்த கோயிலில் இருந்தும் கூட பிரம்மராட்சசி, பூதத்தார், தளவாய்மாடசாமி, தூசி மாடசாமி,

பட்ட வராயர் சன்னதிகள் முன்பு பக்தர்கள் மாமிச உணவுகளை படைத்தும் வழிபடுவர்.

சங்கிலி பூதத்தார், தளவாய் மாடன், தூசி மாடன் தெய்வங்கள் முன்பு பக்தர்கள் தங்களது மார்பில் சங்கிலியால் அடித்து கொள்ளும் பங்குனி உத்திரமும் இங்கு விசேஷமானதாகும்…

ஐயப்பனின் முதல் நிலையாக விளங்கும் சொரிமுத்து அய்யனார் கோவிலில்.

கார்த்திகை மாதங்களில்… சபரிமலை செல்லும் வழியில் ஐயப்ப பக்தர்கள் இங்கு வந்து சொரிமுத்து அய்யனாரை வணங்கி செல்கின்றனர்… மாலை அணியாதவர்கள், குல சாஸ்தாவே வணங்கி செல்கிறார்கள் ‌..

இந்த கோயிலுக்கு வர வேண்டும் என்றாலே ஒரு பிராப்தம் இருக்க வேண்டும் என்பது பக்தர்களின் ஒரு அசைக்க முடியாத நம்பிக்கை.

சிலருக்கு குல தெய்வத்தை தெரியாதவர்களுக்கு  குலதெய்வமாக ஆதி சாஸ்தா சொரிமுத்து அய்யனார் தான்… எல்லோருக்கும் பொதுவான சாஸ்தா என்பதால் பாபநாசம் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது.

 

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

வணிகம்8 மணி நேரங்கள் ago

8வது ஊதிய கமிஷன்: குறைந்தபட்ச சம்பளம் ரூ.69,000 ஆக உயருமா? முக்கிய பரிந்துரைகள் வெளியீடு!

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

மே 11 கிரக சேர்க்கை 2026: சூரியன்-செவ்வாய் இணைப்பு – 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காலம்!

வேலைவாய்ப்பு8 மணி நேரங்கள் ago

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு 2026: டிகிரி முடித்தவர்களுக்கு 16 அப்ரண்டிஸ் பணியிடங்கள்!

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

சூரியன் மேஷ ராசி பெயர்ச்சி 2026: 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காலம் – முழு பலன்!

வணிகம்8 மணி நேரங்கள் ago

தங்க முதலீட்டில் ஜாக்பாட்: SGB மூலம் 6 ஆண்டுகளில் 302% லாபம் – முழு விவரம்!

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

புதன் நட்சத்திர மாற்றம் 2026: 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காலம் – யார் அந்த லக்கி ராசிகள்?

இந்தியா16 மணி நேரங்கள் ago

பூத் ஸ்லிப் கைக்கு வரவில்லையா? இணையத்தில் டவுன்லோடு செய்வது எப்படி?

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.04.2026

செய்திகள்2 நாட்கள் ago

தமிழக சட்டசபை தேர்தல் 2026: நேரடி அப்டேட்கள், பிரச்சாரம் தீவிரம், டாஸ்மாக் மூடல் அறிவிப்பு!

ஆன்மீகம்2 நாட்கள் ago

சித்திரை மாத ராசி பலன் 2026: சூரியன் மேஷ ராசி பெயர்ச்சி – 12 ராசிகளுக்கு என்ன பலன்?

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2026: 350 சிறப்பு அதிகாரி பணியிடங்கள் – ரூ.1 லட்சம் வரை சம்பளம்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

சென்னை ஐஐடி வேலைவாய்ப்பு 2026: ரூ.18,000 சம்பளத்தில் Junior Executive பணிகள் – உடனே விண்ணப்பிக்க!

இந்தியா5 நாட்கள் ago

ஜனநாயகன் படத்தை பதிவிறக்கம் செய்பவர்கள் மற்றும் பகிர்வோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்

இந்தியா7 நாட்கள் ago

இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்களின் கைகளில் – ஆனால் அந்த கைகளில் இன்று வேலை வாய்ப்பு இல்லை

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

பஞ்சாப் & சிந்து வங்கி வேலைவாய்ப்பு 2026: 1000 Local Bank Officer பணிகள் – டிகிரி முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்க!

இந்தியா5 நாட்கள் ago

G Pay யில் “Pocket Money” என்பது தற்போதைய UPI Circle போன்ற ஒரு புதிய அம்சமாகும்.

இந்தியா6 நாட்கள் ago

ஜப்பானியர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு – முதியவர்கள் கீழே விழுவதைத் தடுக்கும் ரோபோட்டிக் வால்

வணிகம்6 நாட்கள் ago

11 நாட்களில் பணம் இரட்டிப்பாகும் என ஆசையில் ரூ.12.31 கோடி இழந்த மருத்துவர் சைபர் மோசடி அதிர்ச்சி

இந்தியா5 நாட்கள் ago

நமக்கு வரும்; மெசேஜ் இன்பாக்சில் இவற்றின் ரகசியம் உங்களுக்குத் தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

ரயிலில் தேநீர் அதிக விலைக்கு விற்ற சம்பவம் வைரல்: IRCTC கடும் நடவடிக்கை

Translate »
Roczne sprawozdanie rady osiedla i liczyŁo piĘĆ zdaŃ !. Edu. Cəlilabadda novruz bayramı münasibətilə ümumrayon şənliyi keçirilib cenubtv.