Connect with us

தமிழ்நாடு

வேலூர் ஜோஸ் ஆலூக்காஸ் கொள்ளை: சுடுகாட்டில் இருந்து மீட்கப்பட்ட 15 கிலோ நகைகள்!

Published

on

கடந்த சில நாட்களுக்கு முன்னர் வேலூரில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கடையில் 30 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடையில் கொள்ளை அடித்தவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது என்பதும், நகை கடையில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் விசாரணை நடந்து வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இது சம்பந்தமாக ஒருவரிடம் விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடையில் கொள்ளை அடிக்கப்பட்ட 15 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டதாகவும், இந்த நகைகள் உருக்கப்பட்ட நிலையில் சுடுகாட்டில் புதைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இந்த நிலையில் சுடுகாட்டில் அந்த நகைகளை போலீசார் மீட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த நகைகளை உருக்கி சுடுகாட்டில் புதைத்தது யார்? இந்த கொள்ளையில் இன்னும் யார் யார் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள்? என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருவதாகவும் வேலூர் ஜோஸ் ஆலுக்காஸ் கொள்ளையில் ஈடுபட்ட அனைவரையும் ஒட்டுமொத்தமாக பிடித்து விடுவோம் என்றும் காவல்துறையினர் கூறுகின்றனர்.

ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடையில் கொள்ளை அடிக்கப்பட்ட 15 கிலோ நகைகள் உருக்கப்பட்ட நிலையில் சுடுகாட்டில் புதைத்து வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வணிகம்3 வாரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?