Connect with us

தமிழ்நாடு

கோயம்பேடு சந்தையில் படுவீழ்ச்சி அடைந்த காய்கறி விலை: பொதுமக்கள் மகிழ்ச்சி, விவசாயிகள் அதிர்ச்சி!

Published

on

கடந்த சில வாரங்களுக்கு முன் கோயம்பேடு காய்கறிச் சந்தையில் காய்கறிகளின் விலை கணிசமாக உயர்ந்து இருந்த நிலையில் தற்போது காய்கறி விலை கடும் வீழ்ச்சி அடைந்திருப்பது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியையும் விவசாயிகளுக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

இன்று கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வெளிமாநிலங்களில் இருந்து காய்கறி வரத்து அதிகரித்ததன் காரணமாக விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாக கோயம்பேடு வியாபாரிகள் தெரிவித்துள்ளனர் .
உருளைக்கிழங்கு ஒரு கிலோ இருபது ரூபாயில் இருந்து 14 ரூபாயாக குறைந்துள்ளது என்றும் சின்ன வெங்காயம் 30 ரூபாயில் இருந்து 20 ரூபாயாக குறைந்துள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

கத்தரிக்காய் 20 ரூபாய்க்கும் 150க்கு விற்கப்பட்ட எலுமிச்சை 110 ரூபய்க்கும் விற்பனை ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்று கோயம்பேடு காய்கறி சந்தையில் அவரைக்காய் 50 ரூபாய்க்கும் பீட்ரூட் 25 ரூபாய்க்கும் முட்டைகோஸ் 8 ரூபாய்க்கும் பச்சைமிளகாய் 35 ரூபாய்க்கும் கோவக்காய் 30 ரூபாய்க்கும்,சுரைக்காய் இருபது ரூபாய்க்கும் விற்பனையாகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனை அடுத்து பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் காய்கறிகளை தாராளமாக வாங்கி செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?