Connect with us

சினிமா செய்திகள்

4 மணி நேரம் காக்க வைத்த விமான நிலைய அதிகாரிகள்: இதுகூட இல்லையா என நடிகை வனிதா ஆவேசம்!

Published

on

நடிகை வனிதாவை தாய்லாந்து விமான நிலைய அதிகாரிகள் 4 மணி நேரத்திற்கும் மேலாக காக்க வைத்ததாக வெளியாகியிருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் நடித்த ’சந்திரலேகா’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான வனிதா விஜயகுமார், அதன்பின் ’குக் வித் கோமாளி’ ’பிக்பாஸ்’ போன்ற நிகழ்ச்சிகளால் பிரபலம் ஆனார் என்பதும் தற்போது அவர் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனது நண்பர் ஒருவரை பார்ப்பதற்காக தாய்லாந்து தலைநகர் பாங்காக் சென்ற வனிதாவை, விமான நிலைய அதிகாரிகள் 4 மணி நேரம் காக்க வைத்து விட்டதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். வனிதாவுக்கு வழங்கப்பட்ட பாஸ் பிரிண்ட் அவுட் இல்லாததால் விமான நிலையத்திலேயே காக்க வைத்ததாகவும் அவருடைய மொபைலில் அந்த பாஸ் இருந்தாலும் பிரிண்ட் எடுத்து கொடுத்து விட்டுத்தான் உள்ளே நுழைய வேண்டும் என அதிகாரிகள் கூறியதாகவும் அவர் தனது இன்ஸ்டாவில் தெரிவித்துள்ளார்.

ஒரு இரக்கமே இல்லாத அதிகாரி இந்தியாவுக்குச் சென்று பிரிண்ட் அவுட் எடுத்து விட்டு அதன் பிறகு மீண்டும் தாய்லாந்து வாருங்கள் என்று கூறியதாகவும் குறிப்பிட்டுள்ள வனிதா விஜயகுமார் அதன்பிறகு விமான நிலையத்தில் ஒரு பிரிண்ட் அவுட் கூட இல்லையா? என கேள்வியெழுப்பி தனது வழியில் போராட்டம் செய்த பிறகு என்னை தாய்லாந்தில் நுழைய அனுமதி தந்தார்கள் என்றும் கூறியுள்ளார்.

மேலும் தனக்கு ஆதரவு கொடுத்த குடியுரிமை போலீஸ் அதிகாரிகள் மற்றும் தாய்லாந்து நாட்டில் உள்ள பயணிகள் சேவை அதிகாரிகளுக்கு தனது நன்றி என்றும் இன்ஸ்டாவில் தெரிவித்துள்ளார். தாய்லாந்து நாட்டின் விமான நிலையத்தில் நடிகை வனிதா விஜயகுமார் 4 மணி நேரம் காக்க வைக்கப்பட்டார் என்ற தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?