Connect with us

இந்தியா

2வது கணவனை கழட்டிவிட முதல் கணவரின் மகனை திருமணம் செய்த பெண்: அதிர்ச்சி தகவல்

Published

on

இரண்டாவது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை கழட்டி விடுவதற்காக முதல் கணவரின் மகனை திருமணம் செய்துகொண்ட பெண் ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாப்லி என்ற பெண்ணுக்கு அவருடைய உறவினருடன் திருமணம் நடந்தது. இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருந்த நிலையில் கணவரை விவாகரத்து செய்து விட்டு வேறொருவரை பாப்லி திருமணம் செய்து கொண்டார்.

இரண்டாவது கணவருடன் கடந்த பல ஆண்டுகளாக வாழ்ந்துவரும் பாப்லிக்கு 3 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இரண்டாவது கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவரை பிரிய முடிவு செய்த பாப்லி, முதல் கணவருக்கு பிறந்த மகனையே திருமணம் செய்து கொண்டார். அது மட்டுமின்றி வீட்டில் இருந்த 20 ஆயிரம் ரூபாய் பணத்தையும் எடுத்துக்கொண்டு இருவரும் ஊரை விட்டு ஓடி விட்டதாக தெரிகிறது.

இது குறித்து பாப்லியின் இரண்டாவது கணவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளதை அடுத்து இந்த புகார் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து, தலைமறைவாக உள்ள பாப்லி மற்றும் அவரது மகனும் கணவருமான இளைஞரையும் தேடி வருகின்றனர்.

ஒரு பெண் இரண்டாவது கணவரையும் பழிவாங்க முதல் கணவரின் மகனையே திருமணம் செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வணிகம்3 வாரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?