உலகம்
இந்தியா திரும்பிய மருத்துவ மாணவர்களுக்கு உக்ரைன் கல்லூரிகளின் மகிழ்ச்சியான அறிவிப்பு!
இந்தியா திரும்பிய மருத்துவ மாணவர்களுக்கு அடுத்த வாரம் முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படும் என உக்ரைன் மருத்துவக் கல்லூரிகள் அறிவித்துள்ளன.
உக்ரைன் மருத்துவக் கல்லூரிகளில் இந்தியர்கள் உள்பட பல வெளிநாட்டினர் மருத்துவ படிப்பு படித்து வந்த நிலையில் ரஷ்யா திடீரென உக்ரைன் மீது போர் தொடுத்ததன் காரணமாக தங்களது தாய் நாட்டிற்கு மாணவர்கள் திரும்பினர் .
இதனால் உக்ரைனில் படித்துவந்த மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுமோ என்ற அச்சம் இருந்தது. இந்த நிலையில் மார்ச் 20ஆம் தேதி வரை உக்ரைனில் உள்ள மருத்துவம கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகவும் மார்ச் 21 முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படும் என பல்கலைக்கழகத்திலிருந்து மின்னஞ்சல் மூலம் இந்திய மாணவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் போர் முடிவடைந்ததும் சில மாதங்களில் நேரில் வந்தும் மருத்துவ படிப்பை தொடரலாம் என்றும் அந்த மின்னஞ்சலில் கூறப்பட்டுள்ளதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் உக்ரைனில் மருத்துவம் படித்த மாணவர்களின் படிப்பு தடைபடாது என்பது உறுதியாகியுள்ளது.