தமிழ்நாடு
பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு: சென்னையில் இன்றைய நிலவரம்
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்த போதிலும் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் மூன்று மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் இருந்தது.
இந்த நிலையில் 5 மாநில தேர்தலுக்குப் பின்னர் திடீரென கடந்த ஒரு வாரமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது பொது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை 33 காசுகள் உயர்ந்து ரூ.95.33 என விற்பனையாகி வருகிறது அதே போல் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 28 காசுகள் உயர்ந்து ரூ.105.18 என விற்பனையாகி வருகிறது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஒரே வாரத்தில் சுமார் ரூ.4.00 உயர்ந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.