Connect with us

தமிழ்நாடு

காலை உணவு திட்டத்தால் பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Published

on

முதல்வரின் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்ட பிறகு பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் செப்டம்பர் 16-ம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையில் படிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்குக் காலையில் சிற்றுண்டி வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் 60 முதல் 65 சதவீதமாக இருந்த மாணவர்களின் வருகை பதிவு 90 சதவீதமாக அதிகரித்துள்ளதாகத் தரவுகள் கூறுகின்றன.

இது குறித்து தகவல் தெரிவித்துள்ள கோயம்புத்தூர் மாவட்ட மதிய உணவு கண்காணிப்பு அதிகாரி, காலை உணவு திட்டத்தால் மாணவர்கள் பள்ளிகளுக்கு வரும் எண்ணிக்கை 10 முதல் 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்குத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பெயரில் காலையில் ரவா உப்புமா, சேமியா உப்புமா, அரிசி உப்புமா, கோதுமை ரவா உப்புமா, ரவா காய்கறி கிச்சடி, சேமியா காய்கறி கிச்சடி, சோள காய்கறி கிச்சடி, கோதுமை ரவா காய்கறி கிச்சடி, ரவா பொங்கல், வெண் பொங்கல், காய்கறி சாம்பார், ரவா கேசரி, சேமியா கேசரி ஆகிய உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

உலகளாவிய பசி குறியீடு பட்டியலில் 101வது இடத்திலிருந்து 107வது இடத்திற்கு இந்தியா பின் தள்ளப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசின் இந்த திட்டத்தால் பள்ளி மாணவர்கள் வருகைப் பதிவு அதிகரித்துள்ளதாக வெளியாகியுள்ள செய்து ஆறுதலாக உள்ளது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?