உலகம்
15 ஆண்டுகள் சிறை: ரஷ்யாவின் அறிவிப்பை அடுத்து வெளியேறுவதாக டிக்டாக் அறிவிப்பு:
ரஷ்யாவில் டிக் டாக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் போலியான தகவல்கள் பதிவு செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனம் மற்றும் போலி தகவல் பதிவு செய்த நபர்களுக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என ரஷ்ய அதிபர் புதின் அறிவித்ததை அடுத்து புதிய வீடியோக்கள் பதிவு செய்வதை நிறுத்துவதாகவும் தற்காலிகமாக ரஷ்யாவில் இருந்து வெளியேற உதவும் டிக் டாக் நிறுவனம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில நாட்களாக உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் உக்கிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் போர் நிலவரம் குறித்து சமூக வலைதளங்களில் ஒருசிலர் தங்கள் இஷ்டத்துக்கு பதிவு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் போர் குறித்த தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்பவர்களுக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்படும் என ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார். இதனை அடுத்து நிறுவனம் நேரலை ஒளிபரப்பு மற்றும் புதிய வீடியோக்கள் பதிவு செய்வதை தற்காலிகமாக நிறுத்திக் கொள்வதாக டிக்டாக் அறிவித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
ஆனால் அதே நேரம் உக்ரைன், ரஷ்ய பிரச்சினைகள் தீர்க்கப்பட்டபின் முழுவீச்சில் மீண்டும் டிக் டாக் நிறுவனம் சில மாதங்கள் கழித்து இயங்கும் என்று அறிவித்து உள்ளது. டிக் டாக் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு டிக் டாக் பயனாளிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.