ஆன்மீகம்
வரப்போகிற தைப்பூசத்திற்கு விரதம் இருக்கப் போறீங்களா?

தைப்பூசம் 2026 அன்று பிப்ரவரி 1, ஞாயிற்றுக்கிழமை வருகிறது. இந்த நாளில் பௌர்ணமி மற்றும் பூசம் நட்சத்திரம் இணைந்து வருகிறது !
தைப்பூசத் திருநாள் மிக முக்கியமான நாள் என்பதால் இந்த நாளில் முருகப் பெருமானிடம் உள்ளம் உருக என்ன பிரார்த்தனையை முன் வைத்தாலும் அது நடக்கும். நம்முடைய வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது நம்பிக்கை. முருகப் பெருமான், தைப்பூச நாளில் தான் வள்ளியை மணம் முடித்ததாக சொல்லப்படுகிறது. அதனால் இது திருமண தடை அகற்றும் நாளாகவும் கருதப்படுகிறது.
தை பூசம் மறுநாள் பெரும்பாலும் பௌர்ணமியாக இருக்கும். 27 நட்சத்திரங்களில் 8வது நட்சத்திரம் பூச நட்சத்திரம். இதனை புஸ்ய நட்சத்திரம் என்பார்கள். இது சனியின் நட்சத்திரம், ஆனால் இதன் அதிதேவதையாக குரு பகவான் வருகின்றார்.
இதன் காரணமாக அறிவு, தெளிவு, ஞானம் தரும் நாளாகவும், தொட்டதெல்லாம் துலங்கும் நாளாக தை பூச திருநாள் அமைகிறது.
காவடி எடுத்தல், அலகு குத்துதல், உள்ளிட்ட வேண்டுதல் இருந்தால் நிறைவேற்றலாம். தீராத நோய் ஏற்பட்டு அவதிப்படுவோர், முருகனுக்கு பால் காவடி எடுக்க நோய் தீரும் என்பது ஐதீகம். பால் காவடி என்பதும் பால் குடம் என்பது ஒன்று தான்.
மறக்காமல் தடைப்பட்டு வரும் திருமண பேச்சை தொடங்க பூசம் நாள் சிறந்தது என்பதால் உடனே தொடங்கி முருகனின் அருளால் திருமண பாக்கியம் பெறுங்கள்.
தைப்பூசத்திற்கு உலகம் முழுவதும் உள்ள முருகன் கோவிலில் அதி விமரிசையாக பால்குடம் எடுத்து கோலாகலமாக கொண்டாடுவார்கள். முருக பக்தர்கள் அந்த நாளில் முருகனுடைய அருளை பெற விரதம் இருந்து வழிபாடு செய்வார்கள். அப்படி விரதம் இருப்பதாக இருந்தால் எந்த நாள்களில் எப்படி விரதம் இருப்பது என்று பார்ப்போமா?
48 நாட்கள் விரதம் : 2025 டிசம்பர் 15 ஆம் தேதி தொடங்கி, 2026 பிப்ரவரி 1 ஆம் தேதி வரை 48 நாட்கள் விரதம் இருக்கலாம்.
21 நாட்கள் விரதம் : 48 நாட்கள் விரதம் இருக்க முடியாதவர்கள், ஜனவரி 22 ஆம் தேதி விரதத்தைத் தொடங்கி பிப்ரவரி 11 ஆம் தேதி வரை கடைபிடிக்கலாம்.
7 நாட்கள் விரதம் : பெரும்பாலானோர் தைப்பூச நாளில் மட்டும் விரதம் இருப்பார்கள். சில பக்தர்கள் தைப்பூசம் மற்றும் அதற்கடுத்த நாள் ஆகிய இரு நாட்களும் விரதம் இருப்பார்கள். 7 நாட்கள் விரதம் இருப்பது என்பது தனிப்பட்ட நம்பிக்கையைப் பொறுத்தது. பொதுவாக, இது ஒரு வாரத்திற்கு குறிப்பிட்ட நாட்களில் விரதம் இருப்பதைக் குறிக்கும்.
கடைபிடிக்க வேண்டியவை :
விரதம் இருக்கும் போது, பகலில் உண்ணாவிரதம் இருப்பது அல்லது சைவ உணவு மட்டும் உண்பது நல்லது. விரதத்தின் போது, மனதை தூய்மையாக வைத்திருப்பது அவசியம். கோயிலுக்கு சென்று வழிபடுவது, முருகனின் பெருமைகளைப் படிப்பது போன்றவை சிறப்பு சேர்க்கும் !











