Connect with us

தமிழ்நாடு

வகுப்பறையில் மது அருந்திய மாணவிகள்: வீடியோ வைரலானதால் சஸ்பெண்ட்!

Published

on

வகுப்பறையில் மாணவிகள் மது அருந்திய வீடியோ இணையதளங்களில் வைரலானதை அடுத்து மாணவிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் வகுப்பறையில் மது அருந்திய 10 பேர் தற்காலிகமாக இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது .காஞ்சிபுரம் அருகில் உள்ள தனியார் கல்லூரியில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பள்ளி வளாகத்தில் உள்ள வகுப்பறையில் மாணவிகள் அமர்ந்து கொண்டு குளிர்பானத்தில் மது கலந்து 10க்கும் மேற்பட்ட மாணவிகள் அருந்தியதாக தெரிகிறது. இதனை வீடியோ எடுத்த மாணவிகளில் ஒருவர் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளதால் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது .

இதனை அடுத்து கல்லூரி நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்தது. மது அருந்திய கல்லூரி மாணவிகளை அழைத்து அறிவுரை கூறிய கல்லூரி நிர்வாகிகள் இதுமாதிரி இனிமேல் நடக்கக்கூடாது என்று கூறியதோடு, பத்துக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளை சஸ்பெண்ட் செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது .

மேலும் மாணவிகளின் பெற்றோர்களை வரவழைத்து பெற்றோர்களுக்கும் கல்லூரி நிர்வாகிகள் அறிவுரை கூறியதாக தெரிகிறது. கல்வி பயில வேண்டிய வகுப்பறையில் மாணவிகள் ஒன்றாக அமர்ந்து மது அருந்திய சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?