தமிழ்நாடு
காவல்துறைக்கு வேன் வழங்கிய சூர்யா: வைரல் புகைப்படங்கள்!
சென்னை காவல் துறையில் உள்ள காவல் கரங்கள் என்ற அமைப்பிற்கு நடிகர் சூர்யா ரூபாய் 6 லட்சம் மதிப்புள்ள வேன் ஒன்றை வழங்கியுள்ளார்.
நடிகர் சூர்யா ஏற்கனவே பல்வேறு சமூக சேவைகள் செய்து வருகிறார் என்பதும் அகரம் என்ற அமைப்பின் மூலம் ஏழை குழந்தைகளுக்கு கல்வி பயில உதவி செய்து வருகிறார் என்பதும் தெரிந்ததே .
இந்த நிலையில் சென்னையில் பிளாட்பாரங்களில் வசிக்கும் மக்கள் மற்றும் வீடற்று, ஆதரவற்று இருக்கும் மக்களுக்கு உதவி செய்வதற்காக சென்னை காவல் துறையின் காவல் கரங்கள் என்ற அமைப்பிற்கு 6 லட்சம் மதிப்புள்ள வேன் வழங்கியுள்ளார்.
இந்த வேனில் உணவு பொருட்கள் மற்றும் மருத்துவ பொருட்கள் உள்ளதாகவும் அவை வீடற்று இருக்கும் பொது மக்களுக்கு உதவி செய்யும் வகையில் இந்த வேன் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது .
நேற்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காவல் சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் இந்த வேனை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.