தமிழ்நாடு
30 அடிக்கும் மேல் எழுந்த கடல் அலைகள்: தனுஷ்கோடியில் சுற்றுலா பயணிகள் ஆச்சரியம்
தனுஷ்கோடியில் கடல் அலை 30 அடிக்கு மேலாக இருந்ததால் அங்கிருந்த சுற்றுலா பயணிகள் பெரும் ஆர்வத்துடன் அதனை பார்த்து வந்தனர்.
இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தீவின் தென் கிழக்கு பகுதியில் உள்ள நகரம்தான் தனுஷ்கோடி. ராமேஸ்வரத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த தனுஷ்கோடி இலங்கையுடன் கடல் வாணிபம் செய்து வந்த சிறந்த துறைமுகமாக விளங்கி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 1964ஆம் ஆண்டு டிசம்பர் 23-ஆம் தேதி ஏற்பட்ட புயல் காரணமாக ராட்சத அலைகள் எழுந்து தனுஷ்கோடி நகரமே கடலால் மூழ்கடிக்கப்பட்டது. தனுஷ்கோடியையும் பாம்பனையும் இணைத்த இருப்புப்பாதை காற்றில் அடித்துச் செல்லப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சென்னையில் இருந்து ராமேஸ்வரம் சென்று கொண்டிருந்த ரயில் அடித்துச் செல்லப்பட்டதில் அதில் பயணம் செய்த 123 பேர் கொல்லப்பட்டனர் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் தனுஷ்கோடி முற்றிலும் சிதிலமடைந்து 50 ஆண்டுக்கு மேலாகியும் தற்போது தான் ஓரளவு புதுப்பிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று தனுஷ்கோடியில் திடீரென முப்பது அடிக்கும் மேலாக கடல் சீற்றத்துடன் காணப்பட்டதாகவும் இதனால் போலீசார் கடலலைகள் அருகே பொதுமக்கள் செல்லாது இருக்கும் வண்ணம் தடுப்புகளை அமைத்ததாகவும் கூறப்படுகிறது .
இந்தநிலையில் தடுப்புகள் அருகே நின்று சுற்றுலா பயணிகள் 30 அடிக்கு மேல் சீறி வரும் கடல் அலையை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் தகவல்கள் வெளியாகியுள்ளன.