Connect with us

தமிழ்நாடு

சசிகலா, இளவரசிக்கு முன்ஜாமின்: பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

Published

on

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்தபோது சசிகலா சட்டத்துக்கு விரோதமாக சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா சிறையில் இருந்தபோது சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காக கோடிக்கணக்கில் சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டது .

இதுகுறித்து பெங்களூர் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த நிலையில் இன்று இந்த வழக்கு பெங்களூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இந்த விசாரணையின்போது சசிகலா மற்றும் இளவரசி ஆகிய இருவரும் நேரில் ஆஜர் ஆனார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய விசாரணையின்போது பெங்களூரு மத்திய சிறை அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் சசிகலா மற்றும் இளவரசி ஆகிய இருவருக்கும் முன்ஜாமின் வழங்கி பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சசிகலா மற்றும் இளவரசி ஆகிய இருவருக்கும் தலா மூன்று லட்சம் ரூபாய் மற்றும் இரண்டு தனி நபர் ஜாமீன் உத்தரவாதம் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கில் தற்போது சசிகலா கைது செய்யப்பட மாட்டார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?