Connect with us

சினிமா

தயாரிப்பாளர் சங்கம் முதுகெலும்பு இல்லாத சங்கம்; பிவிஆர் செய்யும் அட்டூழியம் – சுரேஷ் காமாட்சி!

Published

on

சல்லியர்கள்’ படத்தை திரையிட பிவிஆர் சினிமா மறுப்பதால் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடுகிறேன்” ; தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அதிரடி!

“தயாரிப்பாளர் சங்கம் இன்று முதுகெலும்பு இல்லாத சங்கமாக இருக்கிறது” ; சல்லியர்கள் பட தியேட்டர்கள் ஒதுக்கீடு விவகாரத்தில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி காட்டம்!

“தமிழர்கள் அல்லாத ஒரு கூட்டம் திரையரங்குகளை வளைத்துக்கொண்டு அடாவடி செய்கிறது” ; சல்லியர்கள் பட தியேட்டர்கள் விவகாரம் குறித்து இயக்குநர் வ.கௌதமன் கண்டனம்!

“தமிழர் இன வரலாற்றை ஒரு தமிழன் படமாக எடுத்தால் தியேட்டர் தர மறுக்கிறார்கள்” ; ‘சல்லியர்கள்’ பட இயக்குநர் கிட்டு வேதனை!  

CW நிறுவனம் சார்பில் கலைமாமணி சேது கருணாஸ் மற்றும் கரிகாலன் இணைந்து தயாரித்துள்ள படம் ‘சல்லியர்கள்’. மேதகு படத்தை இயக்கிய இயக்குநர் கிட்டுவின் இயக்கத்தில்  உருவாகியுள்ள இரண்டாவது படம் இது.

சத்யா தேவி என்பவர் டாக்டர் நந்தினியாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, அவரது தந்தையாக கருணாஸும், ஆர்மி வில்லனாக களவாணி புகழ் திருமுருகனும் மற்றும் டாக்டர் செம்பியனாக மகேந்திரனும் நடித்துள்ளனர். இன்னும் பல புதுமுகங்களும் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.

கவிப்பேரரசு வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ள இந்த படத்திற்கு சேது கருணாஸ், அவரது மகன் நடிகர் கென் கருணாஸ் மற்றும் அவரது நண்பர் ஈஸ்வர் ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ளனர்.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் மூலமாக இந்தப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுவதாக இருந்தது. ஆனால் திரையரங்குகளில் இப்படம் வெளியாக முடியாத சூழல் இருப்பதால் ஒடிடி தளத்தில் வெளியிடுவதாக அறிவித்தார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.

‘சல்லியர்கள்’ படத்தின் சிறப்பு காட்சியை பத்திரிகையாளர்களுக்காக திரையிட்டு காட்டிய பின் அவர்களிடம் பேசும்போது தனது இந்த முடிவை அறிவித்தார் சுரேஷ் காமாட்சி.

இது குறித்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசும்போது:

சல்லியர்கள் படத்தை பார்த்துவிட்டு என்னுடைய சொந்த விருப்பத்தின் பெயரில் இந்த படத்தை நானே ரிலீஸ் செய்ய முன் வந்தேன். இதற்கு முன்னதாக கிட்டத்தட்ட மூன்று நான்கு முறை திரையரங்குகளை ஒப்பந்தம் செய்து ரிலீஸ் தேதி அறிவித்து சரியான திரையரங்குகள் கிடைக்காதது உள்ளிட்ட சில காரணங்களால் கேன்சல் செய்து இருக்கிறேன். அடுத்த வாரம் ஜனநாயகன், பராசக்தி படங்கள் வெளியாக இருக்கும் நிலையில் இந்த வாரம் எந்த பெரிய படங்களின் ரிலீஸும் இல்லை என்பதால் படத்திந ரிலீஸ் தேதியை ஜன-1ஆம் தேதி அறிவித்தோம், ஆனால் இப்போது வருத்தமான செய்தி என்னவென்றால் நாளை இந்த படத்தை திரையரங்குகளில் கொண்டு வர முடியவில்லை.

காரணம் எங்களுக்கு வெறும் 27 தியேட்டர்கள் மட்டுமே சல்லியர்கள் படத்திற்காக கொடுத்திருக்கிறார்கள். அதாவது தமிழ்நாடு முழுவதும் தினசரி 27 காட்சிகள் மட்டுமே கொடுத்திருக்கிறார்கள். சிறிய படங்களுக்கு இந்த அளவுக்குத் தான் திரையரங்குகள் கொடுக்க முடியும் என்று காரணம் சொல்கிறார்கள், அதிலும் பிவிஆர் நிறுவனத்திற்கு சொந்தமான ஒரு திரையரங்கில் கூட இந்த படத்தை திரையிட மறுத்து விட்டார்கள். வெளியூரில் இருந்து நம்ம ஊருக்கு வந்து வியாபாரம் செய்யும் அவர்கள் நம் மண் சார்ந்த படத்தை வெளியிடுவதற்கு முடியாது என்கிறார்கள். இதுவே கர்நாடக மாநிலத்தில் இப்படி அவர்கள் கூறியிருந்தால் என்ன நடக்கும் என்பது உங்களுக்கே தெரியும். நம்முடைய பெருந்தன்மையை இவர்கள் முட்டாள்தனமாக நினைக்கிறார்கள்.

 

அதனால் தியேட்டர்கள் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, இந்த படம் வெகுஜன மக்களிடம் சென்று சேர வேண்டும் என்பதற்காக நாளை நேரடியாக ஓடிடி தளத்திலேயே இந்த படத்தை வெளியிட முடிவு செய்துள்ளோம். இங்கே தயாரிப்பாளர் சங்கத்தில் ஒற்றுமை இல்லை. ஒவ்வொரு முறையும் தேர்தல் சமயத்தில் கோடிக்கணக்கில் காசைக் கொண்டு வந்து வாக்குகளை பெற்று தலைவர், செயலாளராக ஆகிறார்களே தவிர, இதுவரை தயாரிப்பாளர்களுக்காக யாரும் எதுவும் செய்யவில்லை, அதே சமயம் 2013ல் கருணாஸ் நடிப்பில் வெளியான ரகளைபுரம் படத்துடன் கருணாஸுக்கு ஏதோ பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருக்கிறது என்பதை காரணம் காட்டி, இன்று மாலை அது தொடர்பாக விநியோகஸ்தர் குமார் என்பவர் எனக்கு போன் செய்து அந்தப் பிரச்சினைக்கான பணத்தை செட்டில் செய்தால் தான் படத்தை ரிலீஸ் செய்ய முடியும் என்று கடைசி நேரத்தில் நெருக்கடி கொடுக்கிறார்கள்.

 

இந்த படத்தை நான் வெளியிடுவதாக அறிவித்து மூன்று மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. அப்போதே அவர்கள் எங்களை அழைத்து இந்த விஷயத்தை பேசி முடித்திருக்கலாம். ஆனால் கடைசி நேரத்தில் பிரச்சினை பண்ண வேண்டுமென்று இப்படி செய்கிறார்கள். இத்தனைக்கும் கருணாஸ் அந்த பணத்தை செட்டில் செய்து விட்டார். அவர்களுக்குள் இருக்கும் பிரச்சினை காரணமாக கோவையிலேயே சல்லியர்கள் படத்தை ரிலீஸ் செய்ய முடியாது என்று கூறி விட்டார்கள். இதுவே நாங்கள் தியேட்டர்களுக்கு படம் கொடுத்தால் 90 நாள் கழித்து எங்களுக்கு பணத்தை கொடுக்கிறார்கள். அவர்கள் கடனுக்கா படத்தை திரையிடுகிறார்கள் ? காசை வாங்கிக்கொண்டு தானே டிக்கெட் கொடுக்கிறார்கள் ? ஏன் ஒரு வாரத்திலேயே எங்களுக்கு பணத்தை கொடுப்பதற்கு என்ன ? நாங்கள் வட்டிக்கு வாங்கி பணம் எடுப்போம். ஆனால் அவர்கள் 90 நாட்கள் அந்த பணத்தை தங்கள் வசம் வைத்துக் கொள்வது என்ன நியாயம் ? சின்ன படங்களுக்கு தியேட்டர்கள் ஏன் கொடுக்க மாட்டேன் என்கிறீர்கள் ? பெரிய நடிகர்களின் வெறும் 12 படங்களை மட்டும் வைத்து வருடம் முழுதும் திரையரங்குகளை ஓட்டிவிட முடியுமா ?

 

இன்று பத்திரிகையாளர்கள் இந்த படத்தை பார்த்தீர்கள். ஒரு காட்சி கொடுப்பதற்கு கூட தகுதி இல்லாத படமா இது ? நான் திரையரங்குகளில் வெளியிடாமல் ஓடிடியில் வெளியிட்டுக் கொள்கிறேன். ஆனால் இதற்கெல்லாம் இந்த சங்கங்கள் பதில் சொல்லியாக வேண்டும். தயாரிப்பாளர் சங்கம் இன்று முதுகெலும்பு இல்லாத சங்கமாக இருக்கிறது. 2013ல் தரவேண்டிய பணத்தை இப்போது கேட்டு பெறுவதில் விநியோகஸ்தர் சங்கத்திற்கு தில் இருக்கிறது. ஆனால் தயாரிப்பாளரின் நலனை காக்க வேண்டிய தயாரிப்பாளர் சங்கத்திற்கு அந்த திராணி இல்லை.. இதில் தயாரிப்பாளர்களுக்கு என எத்தனை சங்கங்கள் தனித்தனியாக இருக்கின்றன. இந்த சங்கங்கள் மூலம் தயாரிப்பாளர்களுக்கு என்ன நல்லது நடந்தது ? ஒன்றுமில்லை. அப்படி என்றால் இந்த சங்கங்களால் என்ன பிரயோஜனம் ? எங்களுக்கு திரையரங்குகள் தர மறுத்த பிவிஆர் நிறுவனத்திற்கும் மற்ற திரையரங்குகளுக்கும் என்னுடைய வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

 

இந்த படத்தின் இயக்குநர், படத்தில் உயிரைக் கொடுத்து நடித்த நடிகை சத்யா தேவி இவர்களது வயிற்றெரிச்சல், பாவம் உங்களை சும்மா விடாது. சின்ன படங்களை நாங்கள் திரையிட மாட்டோம் என்று தெளிவாக நீங்கள் சொல்லிவிட்டால் அதன்பிறகு வேறு யாரும் சின்ன படமே எடுக்க போவதில்லை. அதையாவது சொல்லி விடுங்கள்.

 

என்னுடைய வணங்கான் படம் ரிலீஸின் போதும் எனக்கு இது போன்ற பிரச்சனைகள் நடந்தது. எனக்கு சம்பந்தம் இல்லாத பிரச்சனைகளை எல்லாம் என் முன் கொண்டுவந்து வைத்து பஞ்சாயத்து பண்ணினார்கள். ஒருவருக்கு பணம் செட்டில் செய்ய வேண்டும் என்றால் ஒரு மாதத்திற்கு முன்பே அந்த பிரச்சனை பற்றி பேச வேண்டியதுதானே ? ரிலீஸுக்கு முதல் நாள் பேசுவது என்பது எந்த விதத்தில் நியாயம் ? அப்படி என்றால் உங்கள் அதிகாரத்தை காட்ட நினைக்கிறீர்கள். எத்தனை நாளைக்கு இது நீடிக்கும் ? அப்படியே காலம் போய்விடுமா ?

 

ஒரு படத்தை திரையிட்டு விட்டு அது ஓடவில்லை என்றால் தியேட்டரில் இருந்து தூக்குங்கள். ஆனால் காட்சிகளே தர மாட்டோம் என்றால் எந்த விதத்தில் நியாயம் ? புது ஆட்களின் படங்களுக்கு திரையரங்குகள் தரமாட்டோம் என்று சொன்னால் எப்படி புது ஆட்கள் திரை உலகில் உருவாவார்கள் ? என்னுடைய பேனரில் வெளியானால் நல்ல படம் என்கிற ஒரு பெயர் இருக்கிறது. தப்பான படத்தை நான் இதுவரை கொடுத்திருக்கிறேனா ? இந்த பிரச்சனை குறித்து பேசி தீர்ப்பதற்கு திரைப்பட உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் அனைவரும் அமர்ந்து பேசுவோம் என்று அடிக்கடி தயாரிப்பாளர்களுக்கு அழைப்பு விடுக்கிறார். ஆனால் இங்குள்ளவர்களிடம் ஒற்றுமை இல்லை.

 

சமீபத்தில் கூட அப்படி ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு நடந்தபோது தயாரிப்பாளர் முரளி ராமசாமி அந்த சந்திப்பை கேன்சல் செய்தார். ஆனால் தயாரிப்பாளர்கள் இது பற்றி பேசுவதில்லை. காலப்போக்கில் அவர்கள் ஓட்டு போடும் உறுப்பினர்களாக மாறி சினிமாவை விட்டு ஒதுங்கி சென்று விடுகிறார்கள். ஓட்டு போடும் நேரத்தில் தான் இவர்கள் அவர்களை தேடி செல்கிறார்கள். நானும் தயாரிப்பாளர் சங்கத்தில் பொறுப்பு வகித்து சில விஷயங்களுக்காக போராடினேன். ஆனால் அங்குள்ள தயாரிப்பாளர் தனஞ்செயனே அதற்கு முட்டுக்கட்டை போட்டு தடுத்தார். அதனால் தான் அங்கிருந்து ராஜினாமா செய்து வெளியே வந்தேன்..

 

நான் தமிழ் தேசியம் பேசுபவன்.. என்றாலும் எங்கேயாவது அரசியல் பேசி இருக்கிறேனா ? சினிமாவை சினிமாவாக பார்க்கிறேன். எங்களை அந்த இடத்தில் கொண்டு போய் நிறுத்தி விடாதீர்கள். எங்களை கடைசி வரை நீங்கள் தயாரிப்பாளர்களாகவே பார்க்க ஆசைப்படுகிறோம். எங்களை வேறு மாதிரி மாற்றி விடாதீர்கள். இவங்களெல்லாம் பிரிந்து இருக்கும் வரை தான் உங்கள் ஆட்டம் நடக்கும். இன்று சல்லியர்கள் படத்திற்கு நடந்தது மிகப்பெரிய அராஜகம். கொடுமை… இவ்வளவு பெரிய தமிழ்நாட்டில் ஒரு படத்திற்கு 27 தியேட்டர்கள் கொடுக்கிறார்கள் என்றால் எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம் ? சென்னையில் 170 ஸ்கிரீன்கள் வைத்திருக்கிற பிவிஆர் ஒரு ஷோ கூட கொடுக்கவில்லை. எங்கிருந்தோ வந்து இங்குள்ள பொருளாதாரத்தை சுரண்டுகிறார்கள். ஒரு படத்தை ஓடாது என்று தீர்மானிக்க நீங்கள் யார் ? நீங்களும் வியாபாரி.. நானும் வியாபாரி.. படத்தை ஓட்டுவதற்கு முதலில் இடம் கொடுங்கள். ஓடுகிறதா ஓடவில்லையா என்பதை மக்கள் தீர்மானிக்கட்டும். அதன் பிறகு ஓடவில்லை என்றால் படத்தை தூக்குங்கள்.. ஓடாது என்பதை முன்கூட்டியே தீர்மானிக்க நீங்கள் யார் ? முன்பு நீங்கள் திரையிட்ட படங்கள் எல்லாமே ஓடிவிட்டனவா ? திருப்பூர் சுப்பிரமணியம் போன்ற தியேட்டர் முதலாளிகளிடம் போன் அடித்தால் உடனே எடுத்து பேச முடியும். ஆனால் பிவிஆர் போன்றவை கார்ப்பரேட் நிறுவனங்கள் என்பதால் தானே புறக்கணிக்கிறார்கள்” என்று பேசினார்.

 

 

இந்தியா3 மணி நேரங்கள் ago

‘மை லார்ட்“ மக்களுக்குத் தேவையான, அர்த்தமுள்ள படம்

இந்தியா3 மணி நேரங்கள் ago

டெஸ்லா சைபர் டிரக் கார் மான்செஸ்டர் கோவை சாலைகளில் வலம் வந்தது

இந்தியா4 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 09.02.2026

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

08.02.2026 தமிழ் பஞ்சாங்கம்: ஸப்தமி திதி, சுவாதி நட்சத்திரம், ராகுகாலம் மற்றும் நன்முகூர்தம் தகவல்!

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

09.02.2026 இன்றைய ராசிபலன்: 12 ராசிகளுக்கும் வேலை, பணம், குடும்ப வாழ்க்கை எப்படி?

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

Surya Peyarchi 2026: பிப்ரவரி 13 முதல் கும்ப சங்கராந்தி – இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட காலம்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

சுக்கிரன் நட்சத்திரப் பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிகளுக்கு திடீர் அதிர்ஷ்டமுசுக்கிரன் நட்சத்திரப் பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிகளுக்கு திடீர் அதிர்ஷ்டமும் பணவரவும்!ம் பணவரவும்!

வணிகம்23 மணி நேரங்கள் ago

இந்தியா–அமெரிக்க இடைக்கால வர்த்தக ஒப்பந்தம்: தமிழ்நாடு எப்படி பயன் பெறும்?

வணிகம்23 மணி நேரங்கள் ago

இந்தியா–அமெரிக்கா இடைக்கால வர்த்தக ஒப்பந்தம்: 0% சுங்க வரி பெறும் பொருட்களின் முழுப் பட்டியல்

இந்தியா1 நாள் ago

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அனுமதி இல்லாமல் புகைப்படம் எடுக்க வற்புறுத்தினால் கைது: கோவா போலீஸ் கடும் நடவடிக்கை

தமிழ்நாடு6 நாட்கள் ago

“இன்ஸ்டா கிளிப்புகள் அல்ல… உண்மையான வேலைவாய்ப்புகளையே உருவாக்குகிறோம்” – அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா உறுதி

வணிகம்7 நாட்கள் ago

தமிழ்நாடு அரசு ஓய்வூதியம்: குடும்பப் பாதுகாப்பு நிதி ரூ.50,000 இனி மாவட்டத்திலேயே வழங்கப்படும் | GO 267!

சினிமா4 நாட்கள் ago

லெஜெண்ட் சரவணனின் அதிரடி ஆக்ஷனில் ‘லீடர்’!

வணிகம்7 நாட்கள் ago

பட்ஜெட் 2026: அறிவிக்கப்பட்டுள்ள புதிய திட்டங்கள் – திட்டப் பெயர்கள் & விவரம்

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 04.02.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 03.02.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித்துளிகள் – 03.02.2026

இந்தியா5 நாட்கள் ago

ஹாலிவுட் பிரபலங்கள் மற்றும் உலகத் தலைவர்களின் மாறாத இளமைக்கு காரணம் தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

இந்திய சட்டங்களை பின்பற்றாவிட்டால் வெளியேறுங்கள்: WhatsApp-க்கு உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கை

வணிகம்5 நாட்கள் ago

EPF சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருமா? ஊழியர்களின் சேமிப்பை அதிகரிக்க EPFO ஆலோசனை!

Translate »
bahar depresyonu ile beraber ! deniz bingöl çarelerini yazdı. Ist eine avocado obst oder gemüse. Votre lien pour les livres audio.