Connect with us

தமிழ்நாடு

ஒருநாள் விட்டு ஒருநாள் மட்டுமே பள்ளிகள் இயங்கும்: அரசு அறிவிப்பு!

Published

on

தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுவையில் 20 மாதங்களுக்கு பின்னர் இன்று ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் மாணவர்களுக்கு ஒருநாள் விட்டு ஒருநாள் மட்டுமே பள்ளிகள் இயங்கும் என புதுவை அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் நாடு முழுவதும் இயங்கவில்லை என்பது தெரிந்ததே. இந்த நிலையில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டது. அதேபோல் நவம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் புதுவையில் ஏற்கனவே ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் இன்று முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுகிறது. 20 மாதங்களுக்கு பின் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் மாணவர்கள் இன்று மிகுந்த உற்சாகத்துடன் பள்ளிக்கு செல்ல உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வகுப்பறைகள் அரைநாள் மட்டுமே இயங்கும் என்றும் ஒருநாள் விட்டு ஒருநாள் மட்டுமே பள்ளிகள் இயங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் புதுவை மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும் மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயம் இல்லை எனவும் பெற்றோர் அனுமதி கடிதம் மாணவர்கள் கொண்டுவர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி கொரோனா தடுப்பு ஊசி செலுத்திய ஆசிரியர்கள் ஊழியர்கள் மட்டுமே பள்ளிக்கு வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் புதுவையில் அரைநாள் மட்டுமே ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்புகளுக்கு பள்ளிகள் இயங்கிய நிலையில், இன்று முதல் முழு நேர வகுப்புகள் இயங்கும் என்றும் புதுவை மாநில அரசு தெரிவித்துள்ளது.

வணிகம்3 வாரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?