Connect with us

தமிழ்நாடு

மக்கள் கொண்டாடும் மன்னனை இவ்வாறு பேசியது ஏன்? ரஞ்சித்திடம் நீதிபதி அதிரடி கேள்வி!

Published

on

ராஜராஜ சோழன் விவகாரத்தில் கைதாவதிலிருந்து தப்பிக்க இயக்குநர் பா.ரஞ்சித் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முன் ஜாமீனுக்கு மனுதாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையில் நீதிபதி மனுதாரர் தரப்பிடம் அதிரடி கேள்விகளை எழுப்பியுள்ளார்.

சமீபத்தில் ஒரு மேடையில் பேசிய பிரபல இயக்குநர் பா.ரஞ்சித், மன்னர் ராஜராஜசோழன்தான் மக்களிடம் உள்ள நிலத்தை அபகரித்தவர். அவரது ஆட்சியிலிருந்துதான் ஜாதி பிளவு கட்டமைக்கப்பட்டது. தேவதாசி முறை அவர்கள் ஆட்சியில்தான் கொண்டுவரப்பட்டது. தற்போது ராஜராஜ சோழன் எங்களின் ஜாதிக்காரர் என்று 8 ஜாதிக்காரர்கள் சண்டையிட்டு கொள்கிறார்கள். ராஜராஜ சோழன் ஆட்சிதான் இருப்பதிலேயே இருண்ட ஆட்சி என்று நான் சொல்வேன் என்றார்.

இந்த சூழ்நிலையில் ராஜராஜ சோழனை இழிவு படுத்தும் வகையில் பேசியதாக இயக்குநர் ரஞ்சித் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. திருப்பனந்தாள் காவல் ஆய்வாளர் கவிதா தாமாக முன்வந்து இந்த வழக்குகளை பதிவு செய்தார். இதனால் பா.ரஞ்சித் கைது செய்யப்படக்கூடிய சூழல் உருவானது. இந்நிலையில், தனக்கு முன் ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இயக்குநர் பா.ரஞ்சித் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நேற்று வந்தது. அப்போது இயக்குநர் ரஞ்சித் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வரலாற்றுப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல்களையே என்னுடைய மனுதாரர் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாகப் பலரும் பல மேடைகளிலும் புத்தகங்களிலும் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், எனது மனுதாரரின் பேச்சு மட்டும் தவறாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.

இதனை கேட்ட நீதிபதி, ஆயிரம் ஆண்டுகள் கழித்து ராஜராஜ சோழன் குறித்துப் பேச வேண்டிய அவசியம் என்ன? இன்றும் அரசு மக்களின் நிலங்களைக் கையகப்படுத்தி அதற்கான நிவாரணங்களை வழங்குகிறது. அவ்வாறு இருக்கும்போது நிலம் கையகப்படுத்தியது தொடர்பாக ராஜராஜ சோழனை மட்டும் குறிப்பிடுவது ஏன்? பேசுவதற்குப் பல்வேறு விஷயங்கள் இருக்கும்போது மக்கள் கொண்டாடும் மன்னன் ஒருவனை இவ்வாறு பேசுவது ஏன்? என அடுக்கடுக்காகக் கேள்வி எழுப்பினார்.

மேலும் இதுபோன்று பேசுவதை மனுதாரர் தவிர்க்க வேண்டும் என்று நீதிபதி அறிவுறுத்தினார். இதனையடுத்து அரசு தரப்பு ரஞ்சித்துக்கு முன்ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில் வரும் 19-ஆம் தேதிக்கு இந்த வழக்கின் விசாரணையை தள்ளி வைத்த நீதிபதி அதுவரை இயக்குநர் ரஞ்சித்தை கைது செய்யக்கூடாது என உத்தரவிட்டார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா1 மணி நேரம் ago

வாகன விபத்து-பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டுத்தொகை – திருத்திய வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்.

இந்தியா2 மணி நேரங்கள் ago

உக்ரைன் போர் எதிரொலி – இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷ்யா.

இந்தியா2 மணி நேரங்கள் ago

வாட்ஸ் ஆப்பில் “யூஸர் நேம்“ என்ற புதிய வசதி அறிமுகமாகிறது – மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ்

பர்சனல் ஃபினான்ஸ்6 மணி நேரங்கள் ago

வீட்டில் சும்மா கிடக்கும் தங்கத்தில் வருமானம் பெற முடியுமா? Gold Leasing என்றால் என்ன? முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்

தினபலன்7 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 02 ஜூலை 2026 (வியாழக்கிழமை)

வேலைவாய்ப்பு16 மணி நேரங்கள் ago

IBPS PO ஆட்சேர்ப்பு 2026: 6,715 துணை மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் தொடக்கம்… ஜூலை 21 கடைசி நாள்!

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: அக்டோபர் 9 வரை இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணம், குடும்பத்தில் அதிர்ஷ்ட மழை!

வணிகம்16 மணி நேரங்கள் ago

ஜூலை 2026 டிஏ உயர்வு: 3% அகவிலைப்படி அதிகரிக்க வாய்ப்பு… AICPI-IW தரவால் வலுப்பெற்ற கணிப்பு!

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

புதன் வக்ர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிக்காரர்கள் ஜூலை வரை கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலம்!

வணிகம்16 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: ₹18,000 அடிப்படை சம்பளம் ₹37,800 ஆகுமா? ஃபிட்மென்ட் ஃபேக்டர் குறித்து புதிய தகவல்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

சமூக நல்லிணக்க ஊராட்சி விருது 2026-27: தகுதியான 10 ஊராட்சிகளுக்கு தலா ரூ.1 கோடி பரிசு – விண்ணப்பங்கள் வரவேற்பு

ஆரோக்கியம்6 நாட்கள் ago

கொய்யாப்பழம் சாப்பிட்டால் என்ன நன்மை? நோய் எதிர்ப்பு சக்தி முதல் உடல் எடை கட்டுப்பாடு வரை 7 அசத்தல் பலன்கள்!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 26.06.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேர செய்தித் துளிகள் – 26.06.2026

வணிகம்6 நாட்கள் ago

உங்கள் PAN கார்டை வேறு யாராவது பயன்படுத்துகிறார்களா? கண்டுபிடிப்பது எப்படி? நிபுணர்கள் கூறும் முக்கிய வழிமுறைகள்

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.06.2026.

பர்சனல் ஃபினான்ஸ்6 நாட்கள் ago

10 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய தங்க நகையின் மதிப்பு இன்று எவ்வளவு தெரியுமா? வியக்க வைக்கும் கணக்கு!

வணிகம்6 நாட்கள் ago

மூத்த குடிமக்களுக்கு மகிழ்ச்சி செய்தி! பந்தன் வங்கி FD வட்டி உயர்வு – இனி 7.95% வரை வட்டி பெறலாம்!

வணிகம்3 நாட்கள் ago

கோவை ஆவின் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி: லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து… ஜூலை 1 முதல் புதிய நடைமுறை அமல்!

Fastag
வணிகம்6 நாட்கள் ago

FASTag வேலை செய்யவில்லையா? டோல் பிளாசாவில் இலவசமாக செல்ல NHAI விதிகள் என்ன?

Translate »
Com/kb/278835 für den firefox webbrowser besuchen sie bitte diese seite von mozilla : https : //support. Ik geef toestemming voor de verwerking van mijn operationele gegevens in overeenstemming met de. Vancouver city sightseeing tour : granville island & stanley park.