Connect with us

தமிழ்நாடு

குமரி திருவள்ளுவர் சிலையை 5 மாதங்களுக்கு பார்க்க முடியாது: ஏன் தெரியுமா?

Published

on

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையை இன்னும் ஐந்து மாதங்களுக்கு சுற்றுலா பயணிகள் பார்க்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கன்னியாகுமரி கடல் நடுவே 133 அடி உயரத்தில் திருவள்ளுவருக்கு சிலை வைக்கப்பட்டது என்பதும் இந்த சிலையை பார்க்க தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் திருவள்ளுவர் சிலைக்கு ஒரு கோடி ரூபாய் செலவில் ரசாயன கலவை பூசும் பணி விரைவில் தொடங்கப்படும் என சமீபத்தில் தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் தற்போது அந்த பணி தொடங்கிவிட்டதாக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ரசாயன கலவை பூசப்பட்டு வருகிறது என்றும் இறுதியாக 2017ஆம் ஆண்டு திருவள்ளுவர் சிலைக்கு ரசாயனக் கலவை பூசப்பட்ட நிலையில் தற்போது சிலிகான் எனப்படும் ரசாயன கலவை பூசும் பணி இன்று தொடங்கப்பட்டு உள்ளதாகவும் அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.

சிலையில் உள்ள வெடிப்புகளில் சுண்ணாம்பு கலவை பூசப்பட்டு அதன் பின்னர் காகிதக்கூழ் கொண்டு சிலையில் படித்து உள்ள உப்பு கரைசல் நீக்கப்பட்டு ரசாயன கலவை பூசப்படுகிறது. இதற்காக ஜெர்மனி நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட சிலிக்கான் எனப்படும் ரசாயன கலவை பயன்படுத்தப்பட்ட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த பராமரிப்பு பணி காரணமாக வருகிற நவம்பர் 2ஆம் தேதி முதல் ஐந்து மாதங்களுக்கு திருவள்ளுவர் சிலையை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?