Connect with us

கிரிக்கெட்

அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தாலும் சுதாரித்து ஆடிய ஆஸி.,- மீளுமா இந்தியா! #VideoHighlights

Published

on

இந்திய – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, இன்று காபாவில் தொடங்கியுள்ளது. இன்றைய போட்டியில் ‘யார்க்கர் கிங்’ நடராஜன், அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அவரைப் போலவே தன் அறிமுகப் போட்டியில் வாஷிங்டன் சுந்தரும் விக்கெட் எடுத்து கெத்துக் காட்டினார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி, 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 274 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

இந்தப் போட்டிக்கான டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இதைத் தொடர்ந்து அந்த அணி சார்பில் டேவிட் வார்னர் மற்றும் மார்கஸ் ஹாரிஸ் ஆகியோர் களமிறங்கினார். வார்னர், 1 ரன்னில் சிராஜ் பந்தில் அவுட்டாகி வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார். இன்னொரு ஓப்பனரான ஹாரிஸும், 5 ரன்களில் தாக்கூர் பவுலிங்கில் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.

இதைத் தொடர்ந்து களத்துக்கு வந்த மார்னஸ் லாபுஷானே மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் நிதான ஆட்டத்தைக் கையாண்டனர். இதனால் ஸ்கோர் மெல்ல உயர்ந்தது. ஆனால் நடராஜனின் அசத்தலான பவுலிங் காரணமாக ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

ஆஸ்திரேலியா சார்பில் மார்கஸ் லாபுஷானே, சதம் விளாசி அசத்தினார். அவரின் விக்கெட்டையும், நன்றாக விளையாடி வந்த மேத்யூ வேடின் விக்கெட்டை 45 ரன்களிலும் வீழ்த்தி வீட்டுக்கு அனுப்பினார் நடராஜன். பின்னர் களத்துக்கு வந்த கேம்ரோன் கிரீன் மற்றும் டிம் பெய்ன் ஆகியோர் ஜோடி போட்டு ரன் சேர்க்கத் தொடங்கினார்கள்.

ஆட்ட நேர முடிவில் டிம் பெய்ன் 38 ரன்களுடனும், கிரீன் 28 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். அனுபவமற்ற இந்திய பந்துவீச்சு குழு, நாளை ஆஸ்திரேலிய அணியை 400 ரன்களுக்குள் சுருட்டுமா என்பதைத்தான் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இன்றைய போட்டியில் பவுலர்களில் ஒருவரான நவ்தீப் சயினி காயமடைந்தார். எனவே, நாளை ஒரு பவுலர் குறைவாகவே இந்திய அணி களமிறங்கும் என்று அஞ்சப்படுகிறது.

வலுவான ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து இந்திய அணி, எப்படி தாக்குப் பிடிக்கும் என்பதை இந்த டெஸ்ட் போட்டி காட்டும். இன்றைய போட்டி ஹைலைட்ஸ் இதோ:

வேலைவாய்ப்பு4 mins ago

42 ஆயிரம் சம்பளத்தில் CDSCO-ல் வேலைவாய்ப்பு!

இந்தியா7 mins ago

ரூ.2 லட்சம் கோடி நிறுவனத்தின் சி.இ.ஓ.. தினமும் ரூ.35,000 சம்பளம் பெறும் பெண்..!

வேலைவாய்ப்பு12 mins ago

மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு19 mins ago

ரூ.45,000/- ஊதியத்தில் IIT மெட்ராஸில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு27 mins ago

வேளாண் அறிவியல் மையத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு1 hour ago

தமிழகத்தில் IARI நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா2 hours ago

ரூ.3200 சம்பளத்தில் தொடங்கிய வாழ்க்கை, இன்று ரூ.200 கோடிக்கு சொந்தக்காரர்.. உழைப்பால் உயர்ந்த ரேணு..!

உலகம்2 hours ago

வேலை தேடித்தரும் நிறுவனத்திலேயே வேலைநீக்க நடவடிக்கை.. 2200 ஊழியர்களின் வேலை காலி..!

உலகம்2 hours ago

இன்றைய வேலைநீக்க செய்தி: 15% ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய முன்னணி நிறுவனம்..!

வேலைவாய்ப்பு3 hours ago

பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 2800+

பர்சனல் பைனான்ஸ்7 days ago

மாதம் ரூ.1 லட்சம் பென்சன் வேண்டுமா? எல்.ஐ.சியின் இந்த பாலிசியை எடுங்கள்..!

வணிகம்6 days ago

மின்னல் வேகத்தில் இருக்கு இன்று தங்கம் விலை (19/03/2023)!

வணிகம்6 days ago

வரலாறு காணாத உச்சத்தில் தங்கம் விலை (18/03/2023)!

வேலைவாய்ப்பு6 days ago

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு!மொத்த காலியிடங்கள் 5369

உலகம்7 days ago

முடிவுக்கு வந்தது வொர்க் ப்ரம் ஹோம்.. மீண்டும் பிஸியாகும் அலுவலகங்கள்..!

உலகம்7 days ago

கூகுள் ட்ரான்ஸ்லேட்டை பயன்படுத்தி ஹேக்கிங்? வங்கி கணக்கில் நூதன திருட்டு..!

வேலைவாய்ப்பு3 days ago

தமிழ்நாடு பொதுப்பணி துறையில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 500

உலகம்4 days ago

ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் விப்ரோ.. எத்தனை ஊழியர்கள் தெரியுமா?

வணிகம்4 days ago

இன்று தங்கம் விலை மாற்றமில்லை (20/03/2023)!

வேலைவாய்ப்பு4 days ago

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!