இந்தியா
சிக்கன் குழம்பு சரியாக வைக்காத மனைவி.. கணவன் எடுத்த விபரீத முடிவு…

பெங்களூரில் சோழதேவனஹள்ளி தரபனஹபள்ளி பகுதியில் வசித்து வருபவர் முபாரக். இவரின் மனைவி ஷெரீன் பானு. இவருக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், கடந்த 5ம் தேதி ஷெரின் பானு காணாமல் போனார். அதேநேரம், அவர் காணாமல் போனது பற்றி அவரின் பெற்றோருக்க் முபாரக் எந்த தகவலும் கொடுக்கவில்லை. எனவே, சந்தேகமடைந்த பானுவின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் தன்னை தேடுவதை அறிந்த முபாரக் தலைமறைவானார்.
அதன்பின், வழக்கறிஞருடன் காவல் நிலையத்தில் முபாரக் சரணடைந்தார். மேலும், மனைவி ஷெரின் பானுவை தான் கொலை செய்துவிட்டதாக வாக்குமூலம் அளித்தார். கடந்த 5ம் தேதி யுடியூப் சேனலை பார்த்து சிக்கன் குழம்பு வைத்துள்ளார். ஆனால், குழம்பு ருசியாக இல்லை எனக்கூறி முபாரக் பானுவுடன் சண்டை போட்டுள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த முபாரக் பானுவை வீட்டில் இருந்த உருட்டு கட்டையால் தாக்கி கொலை செய்துள்ளார். அதன்பின் அவரின் உடலை ஒரு மூட்டையில் கட்டி சிக்கபானவாராவில் உள்ள ஏரியில் வீசிவிட்டதாக வாக்குமூலம் அளித்தார். எனவே, அவரை கைது செய்த போலீசார் சிக்கபானவாரா ஏரியில் வீசப்பட்ட ஷெரீன் பானுவின் சடலத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.























