Connect with us

தமிழ்நாடு

சென்னையில் விடிய விடிய கனமழை.. நெருங்கும் புயலால் பரபரப்பு

Published

on

storm cyclone

வங்க கடலில் தோன்றிய மாண்டஸ் புயல் காரணமாக நேற்று இரவு முதல் சென்னையில் விடிய விடிய கனமழை பெய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

storm வங்கக் கடலில் தோன்றிய புயல் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் நேற்று இரவு 7 மணிக்கு சென்னையில் தொடங்கிய மழை தற்போது வரை விடாமல் பெய்து வருகிறது என்பதும் மழைநீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்கி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் சென்னையில் இன்று இரவு முழுவதும் மழை பெய்யும் நாளையும் நாளை மறுநாளும் மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கனமழை பெய்து வருவதால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டாலும், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் இன்று இயங்கும் என்பதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துடன் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பால் உள்பட அத்தியாவசிய பொருட்களை வாங்கக் கூட வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர். ஒரு சில கடைகள் மட்டுமே திறந்து செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் புயல் கரையை கடக்கும் வரை பொதுமக்கள் அத்தியாவசிய தேவை இன்றி வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மகாபலிபுரம் அருகே இன்று மாண்டஸ் புயல் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் அதுவரை பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?