செய்திகள்
தமிழ்நாட்டின் 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை – வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழ்நாட்டில் வானிலை மாற்றம் காரணமாக சில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, குறிப்பாக கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, தென்காசி, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்களில் மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கான வானிலை நிலவரம்:
* இன்று (மார்ச் 22), வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
* சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்.
* அதிகபட்ச வெப்பநிலை 34-35°C, குறைந்தபட்ச வெப்பநிலை 27-28°C இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (செ.மீ):
✅ தூத்துக்குடி – 8 செ.மீ
✅ திற்பரப்பு – 4 செ.மீ
✅ வால்பாறை, சாத்தான்குளம் – 3 செ.மீ
✅ சாத்தான்குளம் ARG, சோலையார் – 2 செ.மீ
✅ மூலைக்கரைப்பட்டி, சின்கோனா, ராதாபுரம் – 1 செ.மீ
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான வெப்பநிலை நிலவரம்:
- அதிகபட்ச வெப்பநிலை: ஈரோடு – 38°C
- குறைந்தபட்ச வெப்பநிலை: கரூர் பரமத்தி – 21.5°C
அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு:
வடக்கு உள் கர்நாடகா முதல் தென் தமிழகத்திற்கு வரையிலான வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, மார்ச் 22 அன்று
கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, தென்காசி, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.
அதிகபட்ச வெப்பநிலை முன்னறிவிப்பு:
* மார்ச் 24-26 – வெப்பநிலை 2-3°C அதிகரிக்கலாம்.
* சில இடங்களில் வெப்பநிலை 35-38°C வரை அதிகரிக்க வாய்ப்பு.
* தமிழக கடலோர பகுதிகளில் வெப்பநிலை 32-36°C இருக்கும்.
சென்னை மற்றும் புறநகர பகுதிகளுக்கான நாளைய (மார்ச் 23) வானிலை நிலவரம்:
வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யலாம்.
அதிகபட்ச வெப்பநிலை 34-35°C, குறைந்தபட்ச வெப்பநிலை 27-28°C இருக்கும்.


















