தமிழ்நாடு
ஒரே வாரத்தில் 3 பைக்குகள் தீவிபத்து: பாதுகாப்பானதா மின்சார பைக்குகள்?
பெட்ரோல் டீசல் விலை விண்ணை முட்டும் அளவு உயர்ந்து கொண்டே வருவதால் பலர் தற்போது மின்சார பைக் வாங்கி வருகின்றனர். ஆனால் கடந்த ஒரு வாரத்தில் அடுத்தடுத்து மூன்று மின்சார பைக் தீ விபத்துக்கு உள்ளானது அதன் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது.
கடந்த வாரம் வேலூர் மாவட்டத்தில் மின்சார பைக் பேட்டரி வெடித்ததில் தந்தை மகள் பரிதாபமாக பலியாகினர். இரவு முழுவதும் சார்ஜ் போட்டதால் தான் இந்த விபத்து நடந்ததாக கூறப்பட்டது.
அதேபோல் இரண்டு நாட்களுக்கு முன்னர் ஓலா நிறுவனத்தின் மின்சார பைக் புனேவில் சாலையில் நின்று கொண்டிருந்தபோது திடீரென தீப்பிடித்தது. அப்போது அந்த பைக்கில் யாரும் இல்லை என்பதால் உயிர் சேதம் இல்லை. இது குறித்து ஆய்வு செய்து வருவதாக ஓலா நிறுவனம் தெரிவித்துள்ளது .
இந்த நிலையில் இன்று திருவள்ளூர் அருகே நரசிங்கபுரம் என்ற பகுதியில் தேன்மொழி என்பவரின் மின்சார பைக் திடீரென்று தீப்பிடித்தது. அதுமட்டுமின்றி பக்கத்தில் இருந்த 2 பைக்குகளும் சேதமடைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரே வாரத்தில் மூன்று மின்சார பைக்குகள் அடுத்தடுத்து தீவிபத்துக்கு உள்ளாகியுள்ளதால் பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மக்களின் பாதுகாப்பை?யாக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.