Connect with us

உலகம்

அவசரப்பட்டு AI தொழில்நுட்பத்தில் முதலீடு செய்யாதீர்கள்.. ‘இன்டர்நெட்டின் தந்தை’ எச்சரிக்கை..!

Published

on

ஒவ்வொரு காலத்திலும் ஒரு மிகப்பெரிய தொழில்நுட்பம் மக்களை ஆச்சரியப்படுத்தி வரும் நிலையில் தற்போது அனைவரது கவனமும் ஏஐ என்று கூறக்கூடிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உள்ளது. குறிப்பாக மைக்ரோசாப்ட் ஆதரவுடன் இயங்கும் ChatGPT என்ற தொழில்நுட்பம் மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

இதனை அடுத்து கூகுள் நிறுவனமும் பார்ட் என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை உருவாக்க இருப்பதாக அறிவித்துள்ளது. இதனை அடுத்து வேறு சில நிறுவனங்களும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை சந்தைக்கு கொண்டு வர முயற்சி செய்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அவசரப்பட்டு யாரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் முதலீடு செய்ய வேண்டாம் என இன்டர்நெட்டின் தந்தை என்று கூறப்படும் Vint Cerf அவர்கள் தெரிவித்துள்ளார். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ChatGPT மற்றும் கூகுளின் பார்ட் ஆகியவைகளில் நெறிமுறை சிக்கல் உள்ளது. இவை எப்போதும் நாம் விரும்பும் வழியில் செயல்படாது, எனவே அவசரப்பட்டு முதலீட்டாளர்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் முதலீடு செய்ய வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் தற்போது ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் பல தவறுகள் செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அந்த தவறுகள் ஒரு கட்டத்தில் சரி செய்த பின்னர் அதன் பிறகு பொறுமையாக முதலீடு செய்யலாம் என்றும் இப்போது முதலீடு செய்ய அவசரப்பட வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மிகவும் அருமையாக இருந்தாலும் அது எப்போதும் சரியாக வேலை செய்யாது என்றும் அதில் ஏற்படும் தவறுகள் கண்டிப்பாக திருத்தப்பட வேண்டும் என்றும் அதுவரை முதலீட்டாளர்கள் பொறுமையாக வேண்டும் என்றும் செயற்கை நுண்ணறிவு குறித்து ஆய்வு செய்யும் பலர் தெரிவித்துள்ளனர்.

எதிர்காலம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்தான் என பலர் முடிவு செய்து அதில் முதலீடு செய்ய திட்டமிட்டு இருக்கும் நிலையில் இன்டர்நெட்டின் தந்தையின் இந்த எச்சரிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்5 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்5 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு5 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்5 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்5 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்5 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?