வணிகம்
திவாலான அனில் அம்பானியை ரூ.2000 கோடி மதிப்பிலான நிறுவனத்தை உருவாக்கி காப்பாற்றிய மகன் அன்மோல் அம்பானி பற்றித் தெரியுமா?

வர்த்தக உலகில் கோடீஸ்வரர்களின் நிலை ஒரே இரவில் மாறிவிடும். அப்படிதான் அனில் அம்பானியின் நிலையும். ரிலையன்ஸ் நிறுவனத்தை உருவாக்கிய திருபாய் அம்பானி 2002-ம் ஆண்டு ஜூலை மாதம் காலமானார்.
அதனைத் தொடர்ந்து பெரும்பாலும் எல்லோர் வீட்டிலும் நடப்பது போல திருபாய் அம்பானியின் மகன் முகேஷ் அம்பானி மற்றும் அனில் அம்பானிக்கு இடையில் சொத்துப் பிரச்சனை தொடங்கியது. சொத்துப்பிரச்சனையில் கோடீஸ்வரர்களுக்கு ஒன்றும் விலக்கல்ல என்பதற்கு இது ஒரு மிகப் பெரிய உதாரணம்.
இந்தியாவின் மிகப் பெரிய நிறுவன முதலாளிகள் இடையில் இப்படி ஒரு பிச்சனை ஏற்படும் போது, அதில் அப்போதைய மத்திய அரசு தலையிட்டு சுமுக முடிவிற்குக் கொண்டு வந்தது.
அடுத்த 10 ஆண்டுகள் எந்த பிரச்சனையும் இல்லாமல் முகேஷ் அம்பானி மற்றும் அனில் அம்பானி இருவரும் வணிகம் செய்து வர, அனில் அபானிக்கு மட்டும் இறங்கு முகம் தொடங்கி திவாலானார். செய்த எல்லா தொழிலும் நட்டம், பிரச்சனை என பல்வேறு சிக்கலுக்கு உள்ளானர்.
அதே சமயம் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தில் அவரது மகன் ஆகாஷ் அம்பானி, மகள் ஈஷா அம்பானி உள்ளே வர, ஜியோ நிறுவனம் உருவாக்கப்பட்டு வேகமாக வளரத் தொடங்கியது.
ஆனால் அனில் அம்பானியின் மகன்கள் ரிலையன்ஸ் நிறுவனத்தில் காலடி எடுத்து வைக்கும் முன்பே அஸ்திவாரம் ஆடத்தொடங்கிவிட்டது. இந்நிலையில் திவாலான அனில் அம்பானியை அவரது அண்ணன் ஆதரிக்கவில்லை என்றாலும் அவரது மகன் 2000 கோடி ரூபாய் மதிப்பிலான நிறுவனத்தை உருவாக்கினார் என்பதை விளக்கமாகப் பார்ப்போம்.
யார் இந்த ஜெய் அன்மோல் அம்பானி?
முகேஷ் அம்பானியின் குடும்பத்தைத் தெரிந்த அளவிற்குப் பலருக்கும் அனில் அம்பானியின் குடுப்பத்தைப் பற்றித் தெரியாது. அனில் அம்பானிக்கும் டினா அம்பானிக்கும் 1991-ம் ஆண்டு பிறந்தவர்தான் ஜெய் அன்மோல் அமாபனி.
ஜெய் அன்மோல் அம்பானி வாழ்க்கை மற்றும் கல்வி
கோடீஸ்வரர்கள் வீட்டில் பிறந்த ஜெய் அன்மோல் அம்பானி, மும்பையின் மிகவும் பிரபலமான செல்வந்தர்களின் பிள்ளைகள் படிக்கும் கேத்தெட்ரல் மற்றும் ஜான் கோனான் பள்ளி மற்றும் இங்கிலாந்து செவன் ஓக் பள்ளியில் பள்ளி படிப்பு கிடைத்தது. தொடர்ந்து அங்கேயே இளங்கலை பட்டம் பெற்ற அவர், வார்மிக் பிஸ்னஸ் பள்ளியில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
ஜெய் அன்மோல் அம்பானி திருமணம்
முகேஷ் அம்பானி அவரது மகன் ஆகாஷ் அம்பானி, ஈஷா அம்பானி இருவருக்கும் ஏற்கனவே பிரம்மாண்ட ஆடம்பர திருமணம் செய்து வைத்துள்ள நிலையில் கடைசி மகனுக்கும் விரைவில் திருமணம் செய்து வைக்க உள்ளார். ஆனால் ஜெய் அன்மோல் அம்பானிக்கு ஏற்கனவே திருமணம் ஆகியுள்ளது பலருக்கும் தெரியாத ஒன்றுதான். ஜெய் அன்மோல் முன்னாள் நிகுஞ்ச் எண்டெர்பிரைசஸ் நிறுவனத் தலைவர் மகள் க்ரிஷா ஷாவை திருமணம் செய்துகொண்டுள்ளார்.
ஜெய் அன்மோல் அம்பானியின் சொத்து மதிப்பு:
இந்த இளம் வயதிலேயே, ஜெய் அன்மோல் அம்பானி கணிசமான செல்வத்தைக் குவித்துள்ளார், ஜாக்ரன் செய்தி நிறுவனம் வெளியிட்ட கருத்துப்படி, இவரின் நிகர சொத்து மதிப்பு 3.3 பில்லியன் டாலர் (ரூ. 20,000 கோடி).
ஜெய் அன்மோல் அம்பானியின் கார் கலெக்ஷன்
கார் ஆர்வலரான ஜெய் அன்மோல் அம்பானியிடம் ரோல்ஸ் ராய்ஸ் பாண்டம் மற்றும் லம்போர்கினி கல்லார்டோ போன்ற சொகுசு கார்கள் உள்ளன.
பிரைவேட் ஜெட் மற்றும் ஹெலிகாப்டர்
ஜெய் அன்மோல் அம்பானிக்கு தனி பிரைவெட் ஜெட் விமானமும், ஹெலிகாப்டரும் உள்ளதாகவும் தகலகள் கூறுகின்றன.
ஜெய் அன்மோல் அம்பானியின் தொழில் பயணம்
ஜெய் அன்மோல் அம்பானி தனது 18 வயதிலேயே ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தில் கோடைக்கால இன்டர்ஷிப்புடன் தனது முதல் வேலையைச் செய்யத் தொடங்கினார். பின்னர் 2014-ல் ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்டில் சேர்ந்தார் மற்றும் ரிலையன்ஸ் குழும இயக்குநர் தரவரிசையில் விரைவாக உயர்ந்தார்.
ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிர்வாக இயக்குனர்
2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஜெய் அன்மோல் அம்பானி நிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனம் நிர்வாக இயக்குநராக பொறுப்பேற்றார்.
ரிலையன்ஸ் இன்ஃப்ரா பாண்ட்
2018-ம் ஆண்டு ரிலையன்ஸ் நிப்பான் மற்றும் ரிலையன்ஸ் ஹோம் நிறுவன போர்டு உறுப்பினர்களான ஜெய் அன்மோல் மற்றும் அவரது தம்பி ஜெய் அன்ஷூல் இருவரும் ஒரு ஆண்டுக்குள்ளேயே அதிலிருந்து வெளியேறினர்.
பங்குகளின் விலை உயர்வு
அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தில் அன்மோல் நுழைந்த போது, அந்த நிறுவனத்தின் பங்குகள் 40% வரை அதிகரித்தது.


















