கிரிக்கெட்
10 ஓவரில் ஆட்டத்தை முடித்த டெல்லி: பஞ்சாப் படுதோல்வி
ஐபிஎல் தொடரில் இன்று 32வது போட்டியில் டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகள் இடையே நடைபெற்று வந்தது.
முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி படு மோசமாக விளையாடி 115 ரன்களுக்கு ஆட்டமிழந்தது/ இதனை அடுத்து 116 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி அணி 10.3 ஓவர்களில் ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 119 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது
டெல்லி அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் டேவிட் வார்னர் 30 பந்துகளில் 64 ரன்கள் எடுத்தார் என்றும் அதில் ஒரு சிக்சர் மற்றும் 10 பவுண்டரிகள் அடங்கும்
இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி 8வது இடத்தில் இருந்து ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.