செய்திகள்
அண்ணாமலையை கைது செஞ்சு பாருங்க!.. சிவி சண்முகம் ஆவேசம்..
அதிமுக ஆட்சி காலத்தில் இருந்தே யுடியூப்பில் திமுகவுக்கு எதிராக மோசமான கருத்துக்களையும், அவதூறுகளையும் தெரிவித்து வருபவர் மாரிதாஸ். இவர் தீவிர பாஜக ஆதரவாளர். இவரின் நோக்கம் திமுகவை கடுமையாக விமர்சிப்பது மட்டுமே.
திமுக மட்டுமில்லாமல் விவசாயிகள், மருத்துவர்கள் என பாஜகவுக்கு எதிராக யார் பேசினாலும், போராடினாலும் அவர்களை பாகிஸ்தான் தீவிரவாதி ரேஞ்சிக்கு கடுமையாக விமர்சிப்பார்.எக்ஷல் ஷீட் ஒன்றை போட்டு, போர்ட் ஒன்றை வைத்துக்கொண்டு யுடியூப்பில் வாய்க்கு வந்தததையெல்லாம் அவர் பேசுவார். அவதூறுகளை அள்ளி தெளிப்பார்.
அதிமுக ஆட்சியிலேயே இவர் மீது காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவும் செய்யப்பட்டது.. ஆனால், அதிமுக அரசின் ஆதரவால் அவர் மீது காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது ஆட்சி மாறியுள்ள நிலையில், குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் அவர் திமுக அரசுக்கு எதிராக அவர் கூறிய சர்ச்சையான கருத்தால் அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அந்த வழக்கில் அவர் விடுதலை செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் சில வழக்குகளில் அவர் கைது செய்யப்பட்டு வருகிற 30ம் தேதி வரை அவர் சிறையில் இருப்பது உறுதியாகியுள்ளது.
இவரின் கைதுக்கு பாஜகவினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவதூறை கருத்து சுதந்திரம் எனக்கூறி திமுகவை திட்டி வருகின்றனர்.
இந்நிலையில், இதுபற்றி செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் சிவி. சண்முகம் ‘மாரிதாசை கைது செய்த காவல்துறையால் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கைது செய்ய முடியுமா? முடிந்தால் அவர் மீது கை வைத்து பாருங்கள்’ என சவால் விட்டுள்ளார்.