இந்தியா
ஆரோக்கிய சேது செயலியை உருவாக்கியது யார்? சர்ச்சை ஆன ஆர்டிஐ கேள்வி?
கோவிட்-19 தொற்று அதிகம் உள்ள பகுதியை அறிந்து, மக்கள் ஜாக்கிரதையாகப் பயணம் செய்ய உதவும் செயலி ஆரோக்கிய சேது.
கோவிட்-19 ஊரடங்கு காலத்தில், அரசு அலுவலக பணிக்கு வரும் ஊழியர்கள், தங்களது போனில் கட்டாயம் ஆரோக்கிய சேது செயலியை நிறுவி இருக்க வேண்டும் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது.
அண்மையில் இந்திய அரசின், இந்த ஆரோக்கிய சேது செயலி முறிச்சிக்கு உலக சுகாதார அமைப்பும் பாராட்டியது. இந்த ஆரோக்கிய சேது செயலியை உருவாக்கியது யார் என்று ஆர்டிஐ மூலமாக, மத்திய மின்னணு அமைச்சகத்திடம் கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
அதற்குப் பதிலளித்த மத்திய மின்னணு அமைச்சகம், ஆரோக்கிய சேது செயலியை உருவாக்கியது யார் என்று எங்களுக்குத் தெரியாது என பதில் அளித்துள்ளது. அது மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஆர்டிஐ கேள்விக்குச் சரியாகப் பதில் அளிக்காத நிலையில், மின்னணு அமைச்சகம், தேசிய தகவல் மையம், நெஜிடி ஆகியவற்றுக்கு ஏன் அபராதம் விதிக்கக் கூடாது என்று மத்திய தகவல் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்நிலையில் ஆரோக்கிய சேது செயலியை யார் உருவாக்கியது என்று MyGov தலைமை நிர்வாக அதிகாரி அபிஷேக் சிங் பதில் அளித்துள்ளார்.
அதில் ஆரோக்கிய சேது செயலியை உருவாக்கியது யார் என்ற சந்தேகம் வேண்டாம். தேசிய தகவல் மையம் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இரண்டும் தனியார் நிறுவனம் ஒன்றின் உதவியுடன் ஆரோக்கிய சேது செயலியை உருவாக்கினர் என்று தெரிவித்துள்ளார். ஆனால் எந்த தனியார் நிறுவனம் அது என்ற விவரத்தைத் தெரிவிக்கவில்லை.
ஆரோக்கிய சேது செயலி இணையதளமும், தேசிய தகவல் மையம் தான் செயலியை உருவாக்கியது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.