Connect with us

வணிகம்

500 வந்தே பாரத் ரயில்கள்.. 35 ஹைட்ரஜன் ரயில்கள்.. நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் அறிவிப்பு?

Published

on

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார் என்பதும் இந்த அரசின் கடைசி பட்ஜெட் என்பதால் இந்த பட்ஜெட்டில் அதிகப்படியான சலுகைகள் இருக்கும் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக மத்திய அரசு வந்தே பாரத் ரயில்களில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது என்பதும் வந்தே பாரத் ரயில்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

சென்னை – மைசூர் ரயில் உள்பட பல வந்தே பாரத ரயில்களுக்கு பயணிகளின் மிகப்பெரிய ஆதரவு கிடைத்துள்ளதால் இன்னும் அதிக அளவிலான வந்தே பாரத் ரயில்களை இயக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அந்த வகையில் வரும் ஒன்றாம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தாக்கல் செய்ய இருக்கும் பட்ஜெட்டில் சுமார் 500 வந்தே பாரத் ரயில்கள் மற்றும் 35 ஹைட்ரஜன் ரயில்களுக்கான அறிவிப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னணி ஊடகம் ஒன்றின் கூற்றின்படி இந்த பட்ஜெட்டில் 35 ஹைட்ரஜன் ரயில்கள் அமைப்பதற்காக தொகை ஒதுக்கப்படும் என்றும் அதேபோல் நாடு முழுவதும் 400 முதல் 500 வந்தே பாரத் ரயில்கள் அமைப்பதற்கான நிதி ஒதுக்கப்படும் என்றும் எதிர்பார்ப்பதாக அறிவித்துள்ளது.

மேலும் 4000 புதிய ஆட்டோமொபைல் கேரியர் பெட்டிகள் மற்றும் 58,000 வேகன் ரயில்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் இவை அனைத்தும் அடுத்த மூன்று ஆண்டுகளில் இயங்கும் வகையில் அறிவிப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே ரயில்வேக்கு 1.9 லட்சம் கோடி நிதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் ரயில்வே துறைக்கு நிதி அமைச்சர் 1.9 லட்சம் கோடியை ஒதுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் ரயில் பாதையை மேம்படுத்துதல், ரயில் பெட்டிகளை நவீனம் ஆக்குதல், மின்மயம் ஆக்குதல் உள்பட பல்வேறு வசதிகள் ரயில்வே துறைக்கு செய்து கொடுத்த நிதி ஒதுக்கப்படும் என்றும் குறிப்பாக 2030 ஆம் ஆண்டுக்குள் கார்பன் வெளியேற்றம் போன்ற இலக்கை அடைய இந்தியா விரும்புகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் ரயில்வே துறையில் சம்பந்தமான அறிவிப்புகள் அனைத்தும் அடுத்த மூன்று ஆண்டுகளில் நிறைவேறும் வகையில் திட்டமிடப்படலாம் என்றும் வரவு செலவுத் திட்டங்களில் அதிகபட்சமாக சுமார் 2.7 லட்சம் கோடி ரூபாய் ரயில்வே துறைக்காக ஒதுக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?