Connect with us

வணிகம்

சென்னை – புதுச்சேரி இடையில் சரக்கு கப்பல் போக்குவரத்து..!

Published

on

சென்னை – புதுச்சேரி இடையில் அண்மையில் சொகுசு கப்பல் சேவை தொடங்கப்பட்ட நிலையில் விரைவில் சரக்கு போக்குவரத்து சேவை தொடங்கப்பட உள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து சரக்கு கப்பல்களில் கொண்டு வரும் கண்டெய்னர்கள் தென் மாவட்டங்களுக்குச் சென்னை துறைமுகத்திலிருந்து லாரிகளில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

இதனால் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கண்டெய்னர் லாரிகள் நீண்ட வரிசையில் நின்று டிராப்பிக் அதிகரிப்பது தொடர் கதையாக உள்ளது.

Bi-Weekly cargo service via sea between Chennai and Puducherry

அதனை குறைக்கும் விதமாகச் சென்னையிலிருந்து புதுச்சேரிக்குக் கடல் வழியாகக் கப்பல் மூலம் கண்டெய்னர்களை எடுத்துச் சென்று, அங்கு இருந்து பிற இடங்களுக்கு கண்டெய்னர்களை பிரித்து அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதனால் கடலூர், சேலம், திருச்சி மற்றும் பிற பகுதிகளிலிருந்து சாலை வழியாகச் செல்லும் கன்டெய்னர்கள் குறையும். சென்னை சாலைகளில் டிராப்பிக் நெரிசல் குறையும்.

அடுத்த ஒரு சில வாரங்களில் 67-மீ நீளமுள்ள எம்வி ஹோப் செவன் கப்பல் மூலமாக வாரத்திற்கு இரண்டு நாட்கள் என இந்த சரக்கு போக்குவரத்து சேவை தொடங்கப்பட உள்ளது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?