கிரிக்கெட்
முடிவுக்கு வந்த ஜெர்சி விவகாரம்: பிசிசிஐ முக்கிய அறிவிப்பு

சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்தும் பாகிஸ்தானின் பெயர் பொறித்த ஜெர்சியுடன் விளையாடும் விவகாரம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
பாகிஸ்தான் இந்த தொடரை நடத்தும் நாட்டாக இருப்பதால், அதனுடைய பெயரை அனைத்து போட்டியாளர்களின் ஜெர்சிகளில் இணைக்க வேண்டும் என ஐசிசி விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்திய அணி நிர்வாகமான பிசிசிஐ, பாகிஸ்தானின் பெயரை இந்திய ஜெர்சியில் சேர்ப்பதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது.
இந்த விவகாரத்தில், அனைத்து நாடுகளும் ஐசிசி விதிகளை பின்பற்ற வேண்டும் என்ற அவசியத்தை ஐசிசி விளக்கமாக கூறியது.
இந்நிலையில், எதிர்வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில், ஐசிசி விதிகளுக்கு இணங்கவே இந்திய அணி விளையாடும் என பிசிசிஐ செயலாளர் உறுதியுடன் அறிவித்துள்ளார்.





















