தமிழ்நாடு
ஜெயலலிதா மரணம்: அப்பல்லோ மருத்துவரின் அதிர்ச்சி வாக்குமூலம்!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் கடந்த சில ஆண்டுகளாக விசாரணை செய்து வந்த நிலையில் திடீரென அப்பல்லோ மருத்துவர்கள் இது குறித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு பதிவு செய்ததால் விசாரணை நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் மீண்டும் விசாரணையை தொடங்க சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்ததை அடுத்து அப்பல்லோ மருத்துவரிடம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை செய்தது.
இந்த விசாரணையின்போது அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர் பாபு மனோகர் ஆறுமுகசாமி ஆணையத்திடம் கொடுத்த வாக்குமூலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக பதவியேற்கும் நாளுக்கு முன் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும் தலை சுற்றல் மயக்கம் ஆகியவைகளால் யாருடைய உதவியுமின்றி ஜெயலலிதாவால் நடக்க முடியாத சூழ்நிலை இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
பதவியேற்புக்கு முந்தையநாள் போயஸ்கார்டனில் ஜெயலலிதாவை தான் சந்தித்ததாகவும் ஜெயலலிதாவுக்கு மருந்துகளை பரிந்துரை செய்து உடற்பயிற்சி மேற்கொள்ள சொன்னதாகவும், மேலும் சிறுதாவூர் அல்லது ஊட்டி சென்று சில நாட்கள் ஓய்வெடுக்க வேண்டுமென்று பரிந்துரை செய்ததாகவும், ஆனால் தினமும் 16 மணி நேரம் வேலை இருப்பதாக கூறிய ஜெயலலிதா ஓய்வெடுக்க மறுத்ததாகவும் அப்பல்லோ மருத்துவமனை ஆறுமுகசாமி ஆணையத்தில் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இந்த வாக்குமூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.