Connect with us

தமிழ்நாடு

ஜெயலலிதா மரணம்: அப்பல்லோ மருத்துவரின் அதிர்ச்சி வாக்குமூலம்!

Published

on

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் கடந்த சில ஆண்டுகளாக விசாரணை செய்து வந்த நிலையில் திடீரென அப்பல்லோ மருத்துவர்கள் இது குறித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு பதிவு செய்ததால் விசாரணை நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் மீண்டும் விசாரணையை தொடங்க சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்ததை அடுத்து அப்பல்லோ மருத்துவரிடம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை செய்தது.

இந்த விசாரணையின்போது அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர் பாபு மனோகர் ஆறுமுகசாமி ஆணையத்திடம் கொடுத்த வாக்குமூலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக பதவியேற்கும் நாளுக்கு முன் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும் தலை சுற்றல் மயக்கம் ஆகியவைகளால் யாருடைய உதவியுமின்றி ஜெயலலிதாவால் நடக்க முடியாத சூழ்நிலை இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

பதவியேற்புக்கு முந்தையநாள் போயஸ்கார்டனில் ஜெயலலிதாவை தான் சந்தித்ததாகவும் ஜெயலலிதாவுக்கு மருந்துகளை பரிந்துரை செய்து உடற்பயிற்சி மேற்கொள்ள சொன்னதாகவும், மேலும் சிறுதாவூர் அல்லது ஊட்டி சென்று சில நாட்கள் ஓய்வெடுக்க வேண்டுமென்று பரிந்துரை செய்ததாகவும், ஆனால் தினமும் 16 மணி நேரம் வேலை இருப்பதாக கூறிய ஜெயலலிதா ஓய்வெடுக்க மறுத்ததாகவும் அப்பல்லோ மருத்துவமனை ஆறுமுகசாமி ஆணையத்தில் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இந்த வாக்குமூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?