தமிழ்நாடு
இன்னும் 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம்
இன்னும் 3 மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 12 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
கடந்த சில நாட்களுக்கு முன்னர் அசானி புயல் ஆந்திரா மற்றும் ஒரிசா மாநிலங்களுக்கு இடையே கரையைக் கடந்த நிலையில் அதுமுதல் தமிழகம் உள்பட தென் மாநிலங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது
குறிப்பாக தமிழகத்தில் சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இன்னும் மூன்று மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
இன்று இன்னும் சில மணி நேரத்தில் மழை பெய்ய இருக்கும் மாவட்டங்கள் பின்வருமாறு: ஈரோடு, சேலம், தருமபுரி, திருவண்ணாமலை, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி