சினிமா செய்திகள்
நான் அழுதால் அவருக்கு வலிக்கும்: டாக்டர் சேதுராமன் மனைவியின் நெகிழ்ச்சி பதிவு!

நான் அழுதால் அவருக்கு வலிக்கும் என மறைந்த நடிகர் டாக்டர் சேதுராமன் மனைவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளது அனைவரையும் நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.
’கண்ணா லட்டு தின்ன ஆசையா’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்தவர் டாக்டர் சேதுராமன். இவர் சென்னையில் ஒரு பிரபல மருத்துவராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் திடீரென கடந்த 2020 ஆம் ஆண்டு மாரடைப்பு காரணமாக அவர் மரணம் அடைந்தார். சேதுராமனின் மரணத்தின் போது அவருடைய மனைவி உமா 5 மாத கர்ப்பிணியாக இருந்தார் என்பதும் அதன் பின் அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் நேற்று தனது கணவரின் இரண்டாவது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டதை அடுத்து சேதுராமனின் மனைவி உமா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் ஒரு பதிவு செய்துள்ளார். அதில் இனிமேல் நான் அழ மாட்டேன், நான் அழுதால் இந்த உலகைவிட்டு சென்ற எனது கணவருன் ஆத்மாவுக்கு வலிக்கும். நாம் ஒரு ஆத்மாவை தான் இழந்து உள்ளோம், ஆனால் அவர் சேர்த்து வைத்திருந்த அத்தனை ஆத்மாக்களையும் பிரிந்து சென்றுவிட்டதால் நம்மை விட அவருக்கு தான் வலி அதிகம் என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவு பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.



















