சினிமா
8 வாரம் ஓடும்னு சொன்னாரே இயக்குநர்.. 2வது வாரத்துக்கே தியேட்டர்கள் காலியா கிடக்குதே?

இயக்குநர் வெங்கி அட்லூரி வாத்தி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தமிழ்நாட்டில் வாத்தி திரைப்படம் 8 வாரம் கன்ஃபார்மா ஓடும் என்றும் தெலுங்கில் சார் திரைப்படம் 4 வாரங்கள் ஓடும் என்றும் பேசி இருந்தார்.
ஆனால், தற்போது தியேட்டர்களின் நிலைமையே வேறாக இருப்பதாக கருத்துக்கள் வெளியாகி உள்ளன.

#image_title
தனுஷின் வாத்தி திரைப்படம் பக்கா பைலிங்குவல் படம் என்றே தமிழுக்கு ஒரு டைட்டில், தெலுங்குக்கு ஒரு டைட்டில் என அறிவிக்கப்பட்டு உருவானது. ஆனால், இது பக்கா தெலுங்கு படம்ப்பா என்று சொல்லும் அளவுக்கு படத்தின் காட்சிகளும், கதைக்களமும் ஆந்திரா பார்டரை நோக்கிச் சென்று விட்டது.
எதிர்பார்த்தபடியே சார் திரைப்படத்தின் மூலம் தனுஷ் தெலுங்கில் நல்ல மார்க்கெட்டை பிடித்துள்ளார். படம் வெளியாகி இதுவரை ஒட்டுமொத்தமாக உலகளவில் 65 கோடி வரை வசூல் ஈட்டியுள்ளது எனக் கூறுகின்றனர்.

#image_title
இதில், அதிகளவு வசூல் தமிழ்நாட்டை விட ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் தான் குவிந்துள்ளதாக ஆச்சர்யமூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் முதல் வாரம் மட்டும் ஓடிய தனுஷின் வாத்தி திரைப்படம் இரண்டாம் வாரத்தில் தியேட்டர்கள் காத்து வாங்குவதாக அதிர்ச்சிகரமான ரிப்போர்ட்டுகள் வெளியாகி உள்ளன.
சமீபத்தில் வாத்தி படத்தின் வெற்றி விழாவை ஐதராபாத்தில் படக்குழு கொண்டாடிய நிலையிலும், நடிகர் தனுஷ் அங்கு செல்வதை தவிர்த்து விட்டு தனது அடுத்த படமான கேப்டன் மில்லரில் கவனம் செலுத்தி வருகிறார் எனக் கூறுகின்றனர்.




















