இந்தியா
மக்கள் தொகை கணக்கெடுப்பை நாமே பதிவு செய்யலாம்: புதிய விதி அமல்

மக்கள் தொகை கணக்கெடுப்பு விபரங்களை பொதுமக்களே பதிவு செய்யும் வகையில் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு கடந்த 2020ஆம் ஆண்டு தொடங்க இருந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த ஆண்டு மீண்டும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடைபெறவுள்ளது.
ஒவ்வொரு பத்தாண்டுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வரும் நிலையில் 1990 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி மின்னணு முறையில் விவரங்களை சேகரிக்கவும், விவரங்களை பதிவு செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
மேலும் ஆன்லைன் மூலம் பொதுமக்களே தங்களது விபரங்களை பதிவு செய்யவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் பயோமெட்ரிக் முறையில் எந்தவித ஆவணங்களும் கேட்கப்பட மாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 30 லட்சம் கணக்கெடுப்பாளர்கள் தலா 650 முதல் 800 பேரின் விவரங்களை ஆன்லைனிலும் நேரடியாகவும் சேகரிக்க உள்ளதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.


















